- Home
- Tamil Nadu News
- கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்
கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்
சேலம்–செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை (NH 544) ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் கொங்கு மண்டலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் செங்கப்பள்ளி சாலை
சேலம்–செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை (NH 544) விரைவில் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. தற்போதைய நான்கு வழித்தடமாக இயங்கும் இந்த முக்கிய பாதையின் 102.5 கிலோமீட்டர் பகுதியை விரிவுபடுத்தும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கிறது வேலைகள் நடைபெற்று வருகின்றன. அறிக்கை முடிந்தது, அடுத்த கட்ட நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆறுவழிச்சாலை திட்டம்
இந்த சாலை சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களையும், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கொச்சி போன்ற நகரங்களையும் இணைக்கும் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து இணைப்பாக உள்ளது. செங்கப்பள்ளி–கோவை இடையேயான 54 கி.மீ. பகுதி ஏற்கனவே ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சேலம் வரை உள்ள பகுதி இன்னும் நான்கு வழித்தடமாக வருவதால், போக்குவரத்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.
செங்கப்பள்ளி சாலை விரிவு
தினமும் சுமார் 30,000 வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகம் இயங்குவதால், உச்ச நேரங்களில் நெரிசல் நிலை உருவாகிறது. இதனால் பயண நேரம் நீளுவதோடு, எரிபொருள் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வு அதிகரிக்கும் பிரச்சனையும் எழுகிறது. இந்த நிலையில், சாலை விரிவாக்கம் அவசியமானதாக மாறியுள்ளது.
கொங்கு மண்டல வளர்ச்சி
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், இந்த சாலை விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டிபிஆர் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, அதன் அடிப்படையில் விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை திட்டம்
இதனுடன், சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. சரளை மற்றும் நாசியனூர் சந்திப்புகளில் வாகனப் பாதைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் அழைக்கப்படுகின்றன. பெத்தம்பாளையம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலப் பணிகள் ஏற்கனவே அனுமதி பெற்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பாடுகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், கொங்கு மண்டலப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும்.

