MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் மீது ஆக்சன் எடுங்க.. இனி பிரசாரமே பண்ணக் கூடாது.. கொதித்தெழுந்த திமுக கூட்டணி கட்சி தலைவர்!

விஜய் மீது ஆக்சன் எடுங்க.. இனி பிரசாரமே பண்ணக் கூடாது.. கொதித்தெழுந்த திமுக கூட்டணி கட்சி தலைவர்!

Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வால்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 Min read
Rayar r
Published : Sep 28 2025, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்
Image Credit : Asianet News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள தமிழக வால்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற, நடிகர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சி. ஒரு பேரதிர்ச்சியையும் பேராபத்தையும் உருவாக்கியுள்ளது.

கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 40 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்ற செய்திகளும், நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்குகின்றன.

24
வாக்குகள் மனித உயிரை விட மேலானதா?
Image Credit : Asianet News

வாக்குகள் மனித உயிரை விட மேலானதா?

நாட்டையே உலுக்கி இருக்கிற இந்த துயரச் சம்பவத்துக்கு விஜய் தான் காரணம். ஒரு மனிதனின் உயிர் வாக்குகளை விட மேலானது என்பதை, அரசியல் களத்தில் சிலர் மறந்துவிட்டனர் என்பது வேதனையளிக்கிறது. வாழும் தலைமுறை குறித்தும். அவர்களின் உயிர் பாதுகாப்புக் குறித்தும், அக்கறை கொள்ளாத ஒருவர் எதிர்காலத் தலைமுறைக்கும். எந்த நன்மையும் செய்துவிட முடியாது என்பதே உண்மை.

 உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சிந்தியக் கண்ணீரும், மரண ஒலங்களும், அழுகுரல்களும், நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிகமான மன வலியையும், வேதனையையும் தந்திருக்கிறது.

Related Articles

Related image1
கரூர் உயிரிழப்புகளுக்கு திமுக அரசு தான் முழு காரணம்..! காரணங்களை பட்டியலிட்ட அண்ணாமலை!
Related image2
கண்ணீரில் மிதக்கும் கரூர்.. பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.. சதி இருப்பதாக நீதிபதியிடம் சென்ற தவெக!
34
விஜய் மீது நடவடிக்கை வேண்டும்
Image Credit : Asianet News

விஜய் மீது நடவடிக்கை வேண்டும்

இத்தகைய ரோடு ஷோ பரப்புரைகள், அரசியல் ஆடம்பரத்துக்காக நடத்தப்படலாம். ஆனால், அதற்காகப் பொதுமக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மக்களின் உயிரைப் பறிக்கும் சினிமாத்தனமான அரசியலை, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு, அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், உயர்நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டு வழக்குப்பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதும், பிரசாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

44
பிரசாரங்களை தடை செய்ய வேண்டும்
Image Credit : ANI

பிரசாரங்களை தடை செய்ய வேண்டும்

எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், தகுந்தப் பாதுகாப்புகளோடு, உயிராபத்து ஏற்படாத வண்ணம் நடைபெறுவதற்கான, நல்லதொரு ஆலோசனைகளைத் தமிழக அரசுக்கும். காவல்துறைக்கும், வழங்கிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ, பிரசாரங்களைத் தடை செய்ய வேண்டும்.

தமிழக அரசு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண நிதி மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும், காயமடைந்தோருக்குச் சிறப்பு மருத்துவக் குழு மூலம் விரைவான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. 

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு. எமது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தச் சகோதர சகோதரிகள் விரைவில் நலம் பெறவும், உளமார வேண்டுகிறோம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved