MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு! வசமாக வேட்டு வைத்த நீதிமன்றம்!

புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு! வசமாக வேட்டு வைத்த நீதிமன்றம்!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Oct 03 2025, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
Image Credit : our own

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதி ஜோதிராமன் முன்பாக இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

25
 புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்
Image Credit : Google

புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

"கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மட்டுமே. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். "எங்கள் தொண்டர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது" என்று முதல் தகவல் அறிக்கையில் (FIR) தவறான தகவல் உள்ளது. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியபோதே காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்துதான்." என புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

Related Articles

Related image1
கரூர் துயர வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Related image2
புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மலுக்கு ஷாக்.! முன் ஜாமின் வழக்கில் பரபரப்பு திருப்பம்
35
தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம்
Image Credit : Asianet News

தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதம்

“கரூர் சம்பவம் நடந்தவுடன் தவெக-வினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கூட்டத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் கூட வழங்கப்படவில்லை. உடற்கூராய்வில், உயிரிழந்தவர்களில் பலர் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) காரணமாகவே இறந்திருப்பது தெரியவந்துள்ளது. நாமக்கல் விவகாரத்தில் ஒருவரின் ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், இப்போது முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை நடத்துவது கடினம். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது.” என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

45
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Image Credit : our own

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜோதிராமன், தனது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"கரூர் நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்த் 2-ம் குற்றவாளியாகவும், நிர்மல் குமார் 3-ம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியைக் கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தற்போது தொடக்க நிலையில் உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலையில் முன்ஜாமீன் வழங்க இயலாது."

இதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

55
புஸ்ஸி ஆனந்த் கைதுக்கு வாய்ப்பு?
Image Credit : Asianet News

புஸ்ஸி ஆனந்த் கைதுக்கு வாய்ப்பு?

ஏற்கனவே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரைப் பிடிக்கக் காவல்துறை தனிப்படை அமைத்துள்ள நிலையில், தற்போது உயர் நீதிமன்றமும் அவர்களது முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்திருப்பதால், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
தளபதி விஜய்
சென்னை
தமிழ்நாடு
மதுரை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
கரூர் துயர வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Recommended image2
புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மலுக்கு ஷாக்.! முன் ஜாமின் வழக்கில் பரபரப்பு திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved