- Home
- Tamil Nadu News
- KN Nehru: கே.என்.நேருவுக்கு சுத்துப்போட்ட முதல்வர் விஜய்.! அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! நடந்தது என்ன?
KN Nehru: கே.என்.நேருவுக்கு சுத்துப்போட்ட முதல்வர் விஜய்.! அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! நடந்தது என்ன?
KN Nehru Case: நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மூன்று கடிதம் அனுப்பியிருந்தது. அதில் இந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 20ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன. இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால் அனைத்து வழக்குகளும் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் விசாரணை இம்மாத இறுதியில் விசாரணைக்கு உள்ள நிலையிலும், அடுத்த விசாரணை வரை எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது' என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்த நிலையில் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். அதன்படி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிறருக்கு எதிராக ஜூன் 23 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கூறியுள்ளது.

