- Home
- Tamil Nadu News
- Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பெண் ஊழியர் செய்த காரியம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அந்த பெண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் கடவுளாகவும், அழகின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை திருவிழா போன்ற தினங்களில் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். இக்கோவிலில் மூன்று விதமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் உள்ளன. இதில் ரூ.100 கட்டணமான சிறப்பு தரிசன ரசீதுகள் கணினி மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலியாக ரசீது கொடுத்து பெண் ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு பல லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பெண் ஊழியர் மேனகா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
கடந்த சில மாதங்களாகப் பக்தர்களிடம் ரூ.100 பெற்றுக் கொண்டு, கட்டண ரசீதை வழங்காமலும், நாளின் இறுதியில் கோயில் கணக்கில் பணத்தை செலுத்தும் போது, கணினி மென்பொருளில் புகார் கூறிவிட்டு, தலா ரூ.100 என பதிவான பல ரசீதுகளை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. முதற்கட்டமாக பெண் ஊழியர் மேனகாவை சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த மோசடி சம்பவம் பக்தர்கள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

