- Home
- Tamil Nadu News
- 10th Marksheets: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
10th Marksheets: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
SSLC Student: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் ஆன்லைனிலும் சான்றிதழ்களைப் பெறலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து மே 20ம் தேதி முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்திலும், சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தன. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: மார்ச்- ஏப்ரல் 2028 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பிற்பகல் முதல் பெற்று கொள்ளலாம். தனித்தேர்வுகள் www.dge.tn.gov.in from என்ற பகுதியில் சென்று Notification என்ற பகுதியில் சென்று SSLC Provisional Mark Certificate என்பதை Click செய்து தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் ஒளிநகல்
விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் மே 27 (புதன்கிழமை) 5.00 மணி (24.05.2026 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணம் எவ்வளவு?
ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் ஒளிநகல் (Scan Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275 தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விடைத்தாளின் ஒளிநகலினை (Scan Copy) இணையதளம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.in.gov.h என்ற பின்னர் இணையதளத்திலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

