MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • யாரையும் உள்ளே விடாதீங்க.. கதவை இழுத்து பூட்டுங்க- தலைமை செயலகத்திற்கு பறந்த முக்கிய உத்தரவு

யாரையும் உள்ளே விடாதீங்க.. கதவை இழுத்து பூட்டுங்க- தலைமை செயலகத்திற்கு பறந்த முக்கிய உத்தரவு

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைமைசெயலகத்தில் ஐ பெரியசாமியின் அறை பூட்டப்பட்டுள்ளது.

1 Min read
Ajmal Khan
Published : Aug 16 2025, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அமைச்சர்களை தொடர்ந்து குறி வைக்கும் ED
Image Credit : our own

அமைச்சர்களை தொடர்ந்து குறி வைக்கும் ED

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சர்களை குறிவைத்து மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. 

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், கேஎன் நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 

23
ஐ பெரியசாமியை சுற்றிவளைத்த அமலாக்கத்துறை
Image Credit : facrbook/ I. Periyasamy

ஐ பெரியசாமியை சுற்றிவளைத்த அமலாக்கத்துறை

தற்போது தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான புகார்கள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சோதனைகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில், அவரது வீடு, மகன் ஐ.பி. செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரது வீடுகள், மற்றும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Related image1
ED RAID : யார் இந்த ஐ. பெரியசாமி.! எம்ஜிஆரையே அலறவிட்டவரா..?
Related image2
8 மாதம் இருக்கும்போதே ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக! அலறும் ஆளுங்கட்சி! குஷியில் இபிஎஸ்!
33
அமைச்சர் அறைக்கு பூட்டு
Image Credit : Asianet News

அமைச்சர் அறைக்கு பூட்டு

இந்த சோதனைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, குறிப்பாக திண்டுக்கல்லில் செல்வாக்கு உள்ள அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனைநடத்தி வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ. பெரியசாமியின் ஆதரவாளர்கள் திண்டுக்கலில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமைசெயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தலைமைசெயலகம் உள்ளே செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ பெரியசாமியின் அமைச்சர் அலுவலகத்திற்கு செல்லும் இடங்களும் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. தலைமைசெயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைய முடியாதபடி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அமலாக்க இயக்குனரகம்
அரசியல்
திமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved