- Home
- Tamil Nadu News
- Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!
Government Employees: அரசு ஊழியர்கள் இனி லேட்டா போனா ஆப்பு தான்! நாளை முதல் அமலாகிறது! முதல்வர் விஜய் அதிரடி.!
Government Employees: தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்கள்
தமிழ்நாடு அரசின் மிக முக்கிய நிர்வாக மையமான புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 10 தளங்களைக் கொண்டது. இதில், முதல்வர், அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட செயலாளர்கள், இயக்குனர்கள், நிர்வாக இயக்குனர்கள் மற்றும் 2,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு
இந்த துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 10 மணிக்கு பணிக்கு பணிக்கு வந்துவிட வேண்டும் என்றும் அதற்கான பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமல்படுத்தாமல் அதை கைவிட்டனர். இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் ஃபேஸ் ஐடி எனப்படும் முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக அடையாள வருகைப் பதிவேடு கட்டாயம்
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறையின் துணை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: மனிதவள மேலாண்மைத்துறையின் முதன்மைச்செயலாளர் அறிவுறுத்தலின் படி, ஜூன் 1-ம் தேதி (அதாவது நாளை) முதல் பயோ மெட்ரிக் முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.
அடையாள அட்டை கட்டாயம்
எனவே இந்த துறையின் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள், தினமும் காலை 10 மணிக்கு வந்து 'பயோ மெட்ரிக்' முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறையில் உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அதோடு, வருகைப்பதிவேட்டிலும் கையெழுத்திட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அனைத்து ஊழியர்களும் தங்களின் அடையாள அட்டையை அணிந்து அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் உள்ள அரசு துறைகளில் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்லவில்லை என்றால் ஆப்பு தான்.

