MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது: திருமாவளவன் விளக்கம்

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது: திருமாவளவன் விளக்கம்

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும், பணி நிரந்தரம் என்பது சமூகநீதிக்கு முரணானது என்று அவர் விளக்கமளித்தார்.

1 Min read
SG Balan
Published : Aug 17 2025, 10:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பணி நிரந்தரம் செய்யக்கூடாது
Image Credit : google

பணி நிரந்தரம் செய்யக்கூடாது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று அவர் பேசியிருப்பதுபுதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற தமது பிறந்தநாள் விழாவில், அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர் சேகர் பாபு, இயக்குநர் பாக்யராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

24
திருமாவளவனின் பேச்சு
Image Credit : Google

திருமாவளவனின் பேச்சு

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக தி.மு.க. அரசுக்கு எதிராகப் போராடவில்லை என தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.

அவர் போராட்டக்களத்திற்குச் சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்றதாகவும், 13 நாட்களாக அமைச்சர்கள் மற்றும் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேசியதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Related image1
அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசாதீங்க! திருமாவளவன் திடீர் கட்டுப்பாடு! என்ன காரணம்?
Related image2
‘சத்தியமாச் சொல்றேன்... அம்பேத்கரை விட உயர்ந்தவர் தொல்.திருமா..’! ஓவராகப் புகழ்ந்து தள்ளிய வனிதா ஐ.பி.எஸ்..!
34
ஏன் பணி நிரந்தரம் செய்யக்கூடாது?
Image Credit : our own

ஏன் பணி நிரந்தரம் செய்யக்கூடாது?

"போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஆனால், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, நீங்கள் காலம் முழுவதும் அதையே செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயம் அல்ல" என்று திருமாவளவன் கூறினார்.

குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.பணி நிரந்தரம் செய்வது என்பது, "குப்பையை அள்ளுபவர்களே காலம் முழுவதும் அள்ளட்டும்" என்ற கருத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

இது சமூகநீதிக்கு முரணானது. எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதே சரியான நிலைப்பாடு என்று அவர் விளக்கமளித்தார்.

44
சாதி புத்தியை விமர்சித்த திருமா
Image Credit : tndipr

சாதி புத்தியை விமர்சித்த திருமா

"தலித் பிரச்சினை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி" என்று அவர் கடுமையாக விமர்சித்தார். "அதிமுக போன்ற கட்சிகள் ஏன் பேசக் கூடாது? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்கு முதலில் களத்திற்குச் சென்றது நான்தான் என்றும், ஆனால் பிரச்சினை என்னவென்று தெரியாதவர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிவசப்படாமல், கருத்தியலில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தொல். திருமாவளவன்
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved