MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பரபரப்பு தீர்ப்பு! 9 பேரும் குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பரபரப்பு தீர்ப்பு! 9 பேரும் குற்றவாளிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019-ல் நடந்த பாலியல் சம்பவ வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : May 13 2025, 10:46 AM IST| Updated : May 15 2025, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பொள்ளாச்சி பாலியல்
Image Credit : FREEPIK

பொள்ளாச்சி பாலியல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். இளம் பெண் ஒருவர் தன்னை அடிக்காதீர்கள் அண்ணா என , பாலியல் துன்புறுதல் செய்த இளைஞர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி பெரும் அனைவரின் மனதையும் பதைபதைப்பை ஏற்படுத்தியது. 

26
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- 9 பேர் கைது
Image Credit : our own

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- 9 பேர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் , பண வசதி படைத்த இளைஞர் கும்பல் பெண்களை காதல் வலை வீசி அழைத்து வந்து , அவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் பல கட்ட விசாரணைக்கு பிறகு முதலில் சபரி ராஜன்,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 

Related Articles

Related image1
Crime: ஒரே நேரத்தில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை; கைது செய்யப்பட்ட காமுகனுக்கு கால் முறிவு
Related image2
CRIME : சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி
36
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- சிக்கிய ஆவணங்கள்
Image Credit : Asianet News

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- சிக்கிய ஆவணங்கள்

அடுத்ததாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது கூட்டு சதி பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

46
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - ரகசிய விசாரணை
Image Credit : Asianet News

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - ரகசிய விசாரணை

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட 9 பேரும் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை ஆனது நடத்தப்பட்டு வந்தது. சாட்சிகளின் அடையாளம் வெளியில் தெரியாமல் இருக்க அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீதித்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது. 

56
கோவை நீதிமன்றத்தில் குற்றவாளிகள்
Image Credit : Asianet News

கோவை நீதிமன்றத்தில் குற்றவாளிகள்

மொத்தம் 1500 பக்க குற்ற பத்திரிகை சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்டது. 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கில் சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களாக இருந்தது.

66
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - தீர்ப்பு என்ன.?
Image Credit : Facebook

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - தீர்ப்பு என்ன.?

பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 குற்றவாளிகள் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து  கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும்  குற்றவாளிகள் என அறிவித்தார். இன்று மாலை 4.30 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. 

இதனிடையே அரசின் சார்பாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த குற்றச்சாட்டில் 20  வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
குற்றம்
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
கோயம்புத்தூர்
காவல்
பொள்ளாச்சி வழக்கு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved