MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!

என்ன! சென்னையில் கொலை நடந்துச்சா.. எப்போ? அதிர்ச்சியாக கேட்ட அமைச்சர்.. குவியும் கண்டனம்!

ஒரு அமைச்சரே இப்படி பொறுப்பற்ற முறையில் எதுவும் தெரியாது என்று கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Jan 29 2026, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சென்னையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
Image Credit : Asianet News

சென்னையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

சென்னையில் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதேபோல் நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பங்கள் தமிழகத்தை உலுக்கின.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரியாக்ஷன்

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சென்னையில் நடந்த கொலைகள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அமைச்சர் அப்படியா? சென்னை தரமணியிலா? எப்போது? என ஒன்றும் தெரியாதது போல் ரியாக்ஷன் கொடுத்தார். 

ஒரு அமைச்சரே இப்படி பொறுப்பற்ற முறையில் எதுவும் தெரியாது என்று கூறியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

23
இபிஎஸ் கடும் கண்டனம்
Image Credit : Asianet News

இபிஎஸ் கடும் கண்டனம்

இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தினமுய்ம் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இபிஎஸ் வெளியிட்ட பதிவில், ''நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைஇந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.

 சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில், இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்.

Related Articles

Related image1
சட்டப்பேரவையை உலுக்கிய கிட்னி திருட்டு மர்மம்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்
Related image2
ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது.. ஒரேடியாக கதவை அடைத்த இபிஎஸ்.. தர்மயுத்த நாயகனின் அடுத்த மூவ் என்ன?
33
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு
Image Credit : our own

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. 

இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித் தொகை.. எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
SIR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சூப்பர் சான்ஸ்.. 10 நாள் அவகாசம் நீட்டிப்பு!
Recommended image3
Now Playing
அதிமுகவில் மீண்டும் ஒன்றுசேர நான் ரெடி.. டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? - ஓ.பி.எஸ்
Related Stories
Recommended image1
சட்டப்பேரவையை உலுக்கிய கிட்னி திருட்டு மர்மம்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்
Recommended image2
ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது.. ஒரேடியாக கதவை அடைத்த இபிஎஸ்.. தர்மயுத்த நாயகனின் அடுத்த மூவ் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved