MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 61 வயது மூதாட்டியிடம் 30 வயது தவெக நிர்வாகி! வசமாக சிக்கியவரை தட்டித்தூக்கிய போலீஸ்!

61 வயது மூதாட்டியிடம் 30 வயது தவெக நிர்வாகி! வசமாக சிக்கியவரை தட்டித்தூக்கிய போலீஸ்!

TVK Member Chain Snatching: சென்னையில் இருந்து ஊர் திரும்பிய மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து லிப்ட் கொடுத்த தவெக நிர்வாகி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் 3 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார். 

1 Min read
vinoth kumar
Published : Sep 18 2025, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக நிர்வாகி
Image Credit : Asianet News

தவெக நிர்வாகி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்தவர் மலர் (61). இவர் கணவரை இழந்த தனியாக வசித்து வரும் மலர் கிடைக்கும் வேலையை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல காத்திருந்தார்.

24
செயின் பறிப்பு
Image Credit : Asianet News

செயின் பறிப்பு

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் மூதாட்டி மலர் உதவி கேட்டுள்ளார். மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார். பின்னர் போக வேண்டிய இடத்திற்கு முன்கூட்டியே வாகனத்தை நிறுத்திய இளைஞர் இதற்கு மேல் பைக் போகாது என்று கூறி மூதாட்டியை இறக்கி விட்டுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்தார்.

Related Articles

Related image1
மயிலாடுதுறையை போல் சிவகாசியிலும்! தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த வாலிபர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Related image2
தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மாதிரியே நடக்கப்போகுது! 20 மாவட்டங்களில் விடாமல் அடிக்கப்போகுதாம் மழை- எந்தெந்த இடங்கள்.?
34
 சிசிடிவி கேமராக்கள்
Image Credit : ANI

சிசிடிவி கேமராக்கள்

இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அது ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் யாரும் வரவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மூதாட்டி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

44
திருச்சி தவெக மாநாடு
Image Credit : Asianet News

திருச்சி தவெக மாநாடு

அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கௌதம் (30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை ஆரணி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கௌதம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எம்பிஏ பட்டதாரியான இவர் திருச்சியில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சிக்கு சென்றதால் கடன் சுமை ஏற்பட்டதால் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தங்க நகை
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved