- Home
- Tamil Nadu News
- ஓயாமல் டார்ச்சர் செய்த மாமியார்... வேறு வழியில்லாமல் ஐ.டி பெண் ஊழியர் செய்த காரியம்.. நடந்தது என்ன?
ஓயாமல் டார்ச்சர் செய்த மாமியார்... வேறு வழியில்லாமல் ஐ.டி பெண் ஊழியர் செய்த காரியம்.. நடந்தது என்ன?
பெங்களூருவில் மாமியார் கொடுமை காரணமாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஷ்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை என பெற்றோர் புகார் அளித்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் புனீத் குமார். இவரது மனைவி சுஷ்மா. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதி ஆண் குழந்தை உள்ளது. குழந்தையை பிறந்ததை அடுத்து சுஷ்மா வேலையில் நின்றுவிட்டார். ஆனால், வீட்டில் இருந்த சுஷ்மாவை மாமியார் கல்பனா எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லி வந்துள்ளார். சின்ன விஷயத்தை கூட பெரிய அளவில் பிரச்சினை செய்தார். இதனால், அடிக்கடி மாமியார் – மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் மாமியார் மருமகள் சுஷ்மாவை சமைக்க விடாமல் இருந்துள்ளார். அவரது கணவனும் கண்டும் காணாமல் இருந்ததால் சுஷ்மா கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். வாழ்ந்த வாழ்க்கை போதும் எண்ணிய சுஷ்மா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த கணவர் மற்றும் குழந்தை கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுஷ்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது மகள் சுஷ்மா வரதட்சணை கொடுமை காரணமாகவே உயிரிழந்ததாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வரதட்சணை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக மாமியார் கல்பனாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
