MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரவுடி பொன்னை பாலுக்கு ஜாமீன்.. காலில் விழுந்து கதறல்.. நடந்தது என்ன? ரிவென்ஞ் எடுக்க காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு

ரவுடி பொன்னை பாலுக்கு ஜாமீன்.. காலில் விழுந்து கதறல்.. நடந்தது என்ன? ரிவென்ஞ் எடுக்க காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்னை பாலு தனது தாய் இறந்ததால் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 31 2026, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

25
உடல்நலக்குறைவால் நாகேந்திரன் உயிரிழப்பு
Image Credit : our own

உடல்நலக்குறைவால் நாகேந்திரன் உயிரிழப்பு

சிறையில் இருந்த படியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

Related Articles

Related image1
நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.. என்ன காரணம்? பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
Related image2
பெட்டி பெட்டியா தக்காளி... மூட்டை மூட்டையாக வெங்காயம்..! லாரியில் குவியும் காய்கறிகள்! ஒரு கிலோ எவ்வளவு.?
35
பொன்னை பாலு ஜாமீன் கேட்டு மனு
Image Credit : our own

பொன்னை பாலு ஜாமீன் கேட்டு மனு

பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கியது. இந்நிலையில், தாய் இறந்து விட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தனக்கு இடைக்காலமாக ஜாமீன் வழங்கக் கோரி ரவுடி பொன்னை பாலு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

45
ரவுடி பொன்னை பாலுவுக்கு ஜாமீன்
Image Credit : our own

ரவுடி பொன்னை பாலுவுக்கு ஜாமீன்

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரே மகன் என்ற அடிப்படையில் உயிரிழந்த தாய்க்கு பொன்னை பாலு மட்டுமே இறுதி சடங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவருக்கு இடைக் காலமாக ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

55
ஆம்ஸ்ட்ராங் தரப்பு
Image Credit : Asianet News

ஆம்ஸ்ட்ராங் தரப்பு

இதனையடுத்து வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த குறவன் குடிசை பகுதியை சேர்ந்த தாயார் மல்லிகா(75) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனது தாயின் இறுதி சடங்கில் பங்கேற்று கண்ணீர் மல்க காலில் விழுந்து பொன்னை பாலு அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலு இடைகால ஜாமீனில் வெளியே வந்த நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை
நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு
Recommended image2
எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
Recommended image3
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு.. பார்ப்பது எப்படி? சான்றிதழ் எப்போது பெறலாம்?
Related Stories
Recommended image1
நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.. என்ன காரணம்? பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
Recommended image2
பெட்டி பெட்டியா தக்காளி... மூட்டை மூட்டையாக வெங்காயம்..! லாரியில் குவியும் காய்கறிகள்! ஒரு கிலோ எவ்வளவு.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved