MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கடல் நடுவே பிரம்மாண்டம்; கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தின் சிறப்புகள் என்ன?; பொதுமக்கள் எப்போது அனுமதி?

கடல் நடுவே பிரம்மாண்டம்; கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தின் சிறப்புகள் என்ன?; பொதுமக்கள் எப்போது அனுமதி?

கன்னியாகுமரியில் கடல் நடுவே பிரம்மாண்டமான கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த பாலத்தை திறந்து வைக்கிறார். 

2 Min read
Author : Rayar r
| Updated : Dec 30 2024, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kanyakumari Glass Bridge

Kanyakumari Glass Bridge

உலகப்புகழ்பெற்ற கன்னியாகுமரி

இந்தியாவின் தென்கோடி முனையமான கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் கன்னியாகுமரிக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, அதிக அளவு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

24
Kanyakumari Glass Bridge budget

Kanyakumari Glass Bridge budget

கண்ணாடி கூண்டு பாலம் 

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்க்கத் தவறுவதில்லை. ஆனால் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் சுற்றுலா பயணிகளால் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.

இதற்கான பணிகள் வேக வேகமாக நடந்த நிலையில், இப்போது விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் கடல் நடுவே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்றும், நாளையும் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

டோட்டலாகவே மாறப்போகிறது அரசு பள்ளிகள்.! வெளியான சூப்பர் அறிவிப்பு- மாணவர்களுக்கு குஷியோ குஷி

34
Kanyakumari Tourist Places

Kanyakumari Tourist Places

முதல்வர் திறந்து வைக்கிறார் 

இந்த விழாவில் கலந்து கொள்ள இன்று கன்னியாகுமரி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தையும் திறந்து வைக்கிறார். இந்த கண்ணாடி கூண்டு பாலம்  ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும் கண்ணாடி கூண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நடுப்பகுதியில் 2.4 மீட்டர் தடிமன் கொண்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அதிக அளவு மக்கள் நடந்து சென்றாலும் அதை தாங்கும் வகையில் இந்த கண்ணாடிகள் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம் அதிகமாக இருந்தாலும் அதை தாங்கும் வகையிலும், பலத்த காற்றில் பாதிக்கப்படாத வகையிலும் கண்ணாடி பாலம் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது. 

மன அழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்- விஜய் பரபரப்பு கடிதம்
 

44
Kanyakumari Thiruvalluvar Statue

Kanyakumari Thiruvalluvar Statue

பொதுமக்கள் அனுமதி எப்போது?

ஆகவே இனிமேல் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறையில் இருந்து இந்த கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்தே சென்று விட முடியும். கண்ணாடி பாலம் வழியாக கடல் நடுவே கடல் அன்னையின் அழகை ரசித்தபடி நடந்து செல்வது ஒருவித திகிலையும், பிரமிப்பையும் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கும். இந்த பாலத்தை இன்று முதல்வர் திறந்து வைக்கும் நிலையில், முழுமையாக பணிகள் முடிந்தபிறகு பொதுமக்கள் கண்ணாடி பாலத்தின் வழியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Recommended image2
2 நாள் விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்!
Recommended image3
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved