MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாகப்பட்டினம்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! என்ன காரணம்? வெளியான தகவல்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! என்ன காரணம்? வெளியான தகவல்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அபினயா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

1 Min read
vinoth kumar
Published : May 25 2025, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Image Credit : Google

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடியை அடுத்த கீழிருப்பு பகுதியை சேர்ந்தவர் அபினயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார்.அபிநயா நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் துப்பாக்கியுடன் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். தனிமையில் வாழ்ந்து வரும் அபிநயா இரவு பணி வழங்குவதால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்திற்கு அவரும் மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

23
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Image Credit : Google

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் அபிநயா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த பெண் காவலர் வெளியில் வந்து பார்த்த போது அபிநயா இடது கழுத்தில் துப்பாக்கிக் கொண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்துள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பெண் காவலர் அளித்த தகவலின் பேரில் ஆயுதப்படை டிஎஸ்பி நாகூர் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணி நேரம்? வெளியான லிஸ்ட்!
Related image2
ரெட் அலர்ட் எச்சரிக்கை! விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! 21 செ.மீ மழை! சுற்றுலாத் தலங்கள் மூடல்!
33
மன உளைச்சல்
Image Credit : Google

மன உளைச்சல்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டி விசாரணை மேற்கொண்டார். மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காவல்
பெண்கள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved