MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆதவ் அர்ஜுனா : சிட்டியை சிறப்பாக்கும் 8 அசத்தல் திட்டங்கள்

கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆதவ் அர்ஜுனா : சிட்டியை சிறப்பாக்கும் 8 அசத்தல் திட்டங்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, அடுத்த 30 ஆண்டுகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு 8 முக்கிய பெருந்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 01 2026, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆய்வுக் கூட்டம்
Image Credit : Aadhav Arjuna/Facebook

ஆய்வுக் கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அடுத்த 30 ஆண்டுகால வளர்ச்சியைச் சமாளிக்கும் வகையிலும் 8 முக்கிய பெருந்திட்டங்கள் (Mega Projects) செயல்படுத்தப்பட உள்ளதாகப் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டத் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் திட்டங்கள் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
8 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்
Image Credit : Google

8 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்

கோவையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலை உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தவும் அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்ட முக்கியப் பணிகள்:

  • அவிநாசி ரோடு மேம்பாலம் நீட்டிப்பு: தற்போதுள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பது.
  • ஆறு வழிச்சாலை விரிவாக்கம்: நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான தற்போதைய புறவழிச்சாலையை (Bypass) 6 வழிச்சாலையாக தரம் உயர்த்துவது.
  • உப்பிலிபாளையம் ரவுண்டானா: போக்குவரத்து நெரிசல் மிகுந்த உப்பிலிபாளையம் சந்திப்பை அகலப்படுத்துவது.
  • மரப்பாலம் விஸ்தரிப்பு: மரப்பாலம் பகுதியில் உள்ள சாலையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட 8 முக்கிய வளர்ச்சிப் பணிகள் இதில் அடங்கும்.

இந்தத் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வறிக்கை (Project Report) தயார் செய்யப்பட்டு, விரைவில் தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒப்புதலுடன் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

Related Articles

Related image1
Now Playing
கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna
Related image2
Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!
34
புதிய அடுக்குமாடி உத்திகள்
Image Credit : X

புதிய அடுக்குமாடி உத்திகள்

அரசு நிலங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, வருங்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் புதிய திட்ட வடிவமைப்பு குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,

"கோவையில் 3 தளங்கள் கொண்ட நீதிபதிகள் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 7 முதல் 8 கோடி ரூபாய் வரை உள்ளது. எனவே, இவ்வளவு மதிப்புமிக்க குறுகிய இடத்தில் அதிகப் பயன் கிடைக்கும் வகையில், குறைந்தபட்சம் 15 தளங்கள் (15 Floors) கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளாக அதை மாற்றியமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அப்போதுதான் அடுத்த 30 ஆண்டுகாலத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும்," என்றார்.

44
துறைகளில் அதிரடி சீர்திருத்தம்
Image Credit : Pinterest

துறைகளில் அதிரடி சீர்திருத்தம்

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் அமைச்சர் அர்ஜுனா கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார்:

1. லாபகரமான பொதுப்பணித்துறை: நஷ்டமில்லாமல் பொதுப்பணித்துறையை லாபம் தரக்கூடிய ஒரு துறையாக மாற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களையும் (Contractors) நேரில் அழைத்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. காலக்கெடு மற்றும் தரம்: எந்தவொரு அரசுப் பணியும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (Timeline) முடிக்கப்பட வேண்டும். தரம் மிக முக்கியம். ஊழல் இல்லாமல் தரமாக ஒரு கட்டடத்தைக் கட்டினால், அது குறைந்தபட்சம் 40 ஆண்டுகளாவது நிலைத்து நிற்கும்.

3. 'பேட்ச் ஒர்க்' வீண் செலவுகளுக்கு முற்றுப்புள்ளி: நெடுஞ்சாலைத்துறையில் 'பேட்ச் ஒர்க்' என்ற பெயரில் தற்காலிகமாகச் சாலைகளைப் பழுதுபார்த்து, மக்கள் பணத்தை வீணடிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

4. அரசு மருத்துவமனைகள் மேம்பாடு: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளின் பழைய கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை முழுமையாகப் பழுதுபார்க்க முடியுமா அல்லது இடித்துவிட்டுப் புதிய நவீன மருத்துவமனைக் கட்டடங்களை உருவாக்கலாமா என்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையைத் தமிழகத்தின் முதன்மைத் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு நகரமாக மாற்றுவதற்கான பணிகளை அரசு தடையின்றி மேற்கொள்ளும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

About the Author

AM
Arun Mozhi Varman
கோயம்புத்தூர்
தமிழ்நாடு வளர்ச்சி
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவை சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்.! குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்!
Recommended image2
Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!
Recommended image3
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
Related Stories
Recommended image1
Now Playing
கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna
Recommended image2
Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved