MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?

Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?

Court Judgment: கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனை, பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொன்ற வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை விவரம் ஜூன் 22-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 18 2026, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

கோவை சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு மகன் அபிஷேக் (6), மகள் திவ்யா (3) என்ற இரண்டு குழந்தைகளை திவ்யா வளர்த்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை(35) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி ராஜதுரை திவ்யாவின் வீட்டுக்கு வந்து அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் பெற்ற தாய் மற்றும் கள்ளக்காதலன் ராஜதுரை அடித்து உதைத்து சித்தரவதை செய்து வந்துள்ளனர். 

பள்ளிக்கு வந்திருந்த தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறியுள்ளனர். குறிப்பாக அம்மாவும், வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக கூறியுள்ளனர். ஆகையால் தன்னை வீட்டு அழைத்து செல்லுமாறு சிறுவன் தந்தையிடம் கதறினார். அப்போது புது வீடு கட்டி முடிந்ததும் தங்களை அழைத்து செல்வதாக ஆறுதல் கூறினார்.

Related Articles

Related image1
Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!
Related image2
DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!
35
Image Credit : Asianet News

இதனிடையே 2020ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அபிஷேக்கை, ராஜதுரையும் திவ்யாவும் அழைத்து சென்றுள்ளனர். அங்கேயே வைத்து குச்சியால் கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் சிறுவன் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தான்.

45
Image Credit : ANI

இதனையடுத்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் திவ்யா மற்றும் ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

55
Image Credit : Asianet News

அதில் தாய் திவ்யா மற்றும் கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி என கூறினார். இருவருக்கும் விதிக்கப்படும் தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு ஜூன் 22-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி விவேகானந்தன் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
பெண்கள்
காவல் நிலையம்
நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Coimbatore Rain: கோவை மட்டுமல்ல இந்த 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்
Recommended image2
கோவை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆதவ் அர்ஜுனா : சிட்டியை சிறப்பாக்கும் 8 அசத்தல் திட்டங்கள்
Recommended image3
கோவை சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்.! குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்!
Related Stories
Recommended image1
Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!
Recommended image2
DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved