MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பாகிஸ்தானில் விளையாட முடியாது..! கதறிய இலங்கை அணி..! வேறு வழியின்றி PCB எடுத்த முடிவு!

பாகிஸ்தானில் விளையாட முடியாது..! கதறிய இலங்கை அணி..! வேறு வழியின்றி PCB எடுத்த முடிவு!

இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் அணி தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவை எடுத்தது.

1 Min read
Rayar r
Published : Nov 13 2025, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாடு திரும்ப முடிவு செய்த இலங்கை அணி
Image Credit : X

நாடு திரும்ப முடிவு செய்த இலங்கை அணி

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி இஸ்லாமாபாத்தில் நடந்து முடிந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது எனவும் உடனடியாக நாடு திரும்புவதாக‌வும் தகவல் வெளியாகி இருந்தது.

24
ராவல்பிண்டிக்கு போட்டிகள் மாற்றம்
Image Credit : ANI

ராவல்பிண்டிக்கு போட்டிகள் மாற்றம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், முத்தரப்பு டி20 தொடர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து ராவல்பிண்டி நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஏழு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
IND vs SA டெஸ்ட், ஓடிஐ, டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
Related image2
IND vs SA 1st Test: துருவ் ஜுரெல் இடத்துக்கு ஆப்பு வைக்கும் ஆல்ரவுண்டர்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
34
போட்டி அட்டவணை மாற்றம்
Image Credit : X/WC2025

போட்டி அட்டவணை மாற்றம்

முன்னதாக, நவம்பர் 29 அன்று நடைபெறும் இறுதிப் போட்டி உட்பட ஐந்து ஆட்டங்களை லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீதமிருக்கும் அனைத்து போட்டிகளையும் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் PCBவெளியிட்ட அறிக்கையில், ''செயல்பாட்டு மற்றும் போட்டித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பரஸ்பர கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் (ZC) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து அட்டவணையை மாற்றியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது'' என்று கூறபப்பட்டுள்ளது.

44
சமாதானம் ஆன இலங்கை
Image Credit : our own

சமாதானம் ஆன இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தையும் தொடரும் என்றும், எந்த வீரரோ அல்லது அதிகாரியோ நாடு திரும்பத் திட்டமிடவில்லை என்றும் அந்த அணி மேலாளர் மஹிந்த ஹலங்கொட தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை அணி பாகிஸ்தானில் தொடர்ந்து விளையாடும் என்று உறுதியாகியுள்ளது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர இலங்கை அணி எடுத்த முடிவிற்கு பிசிபி தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
பாகிஸ்தான்
இலங்கை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved