MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!

இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்!

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் தோற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை கட் செய்தது மட்டுமின்றி தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Mar 02 2026, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்
Image Credit : X@ICC/BCCI

பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லாமல் சூப்பர் 8 சுற்றில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.16.28 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

24
இந்தியாவுடன் தோற்றதால் நடவடிக்கை
Image Credit : Getty

இந்தியாவுடன் தோற்றதால் நடவடிக்கை

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'லீக் சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அடைந்த தோல்வியைத் தொடர்ந்தே இந்தக் கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் சொதப்பி வருவதால் இந்த அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
Related image2
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
34
முன்னாள் வீரர்கள் சாடல்
Image Credit : Getty

முன்னாள் வீரர்கள் சாடல்

பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை அந்த நாட்டின் முன்னாள் வீரர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். "நாட்டின் கிரிக்கெட் வலிமையை உலகுக்குக் காட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கிறது, அதை நீங்கள் வீணடித்துவிட்டீர்கள். டி20 இப்போது ஒரு முறையான ஆட்டமாகிவிட்டது, ஆனால் நமது வீரர்கள் மற்ற அணிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை" என்று ஜாவேத் மியான்தத் கடுமையாக சாடினார்.

நம்மால் கோப்பையை வெல்ல முடியாது

"சில வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனாலும் அவர்கள் பெரிய தொடர்களில் தோல்வியடைகிறார்கள். இப்போதாவது நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று முன்னாள் பேட்ஸ்மேன் முகமது யூசுப் தெரிவித்துள்ளார். ''உயர்மட்ட அணிகளைத் தோற்கடிக்கும் திறன் இல்லையென்றால், நம்மால் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாது. நமது முக்கிய வீரர்கள் உலகக் கோப்பையில் ஜொலிக்கவே இல்லை" என்று முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறியுள்ளார்.

44
பாபர் அசாம் ஓய்வு?
Image Credit : Getty

பாபர் அசாம் ஓய்வு?

டி20 உலகக்கோப்பையில் சொதப்பிய முன்னாள் கேப்டன் பாபர் ஆசம், தற்போதைய கேப்டன் சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் போன்ற மூத்த வீரர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாடு திரும்பிய பிறகு கேப்டன் சல்மான் அலி ஆகா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பாபர் அசாமும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
பாகிஸ்தான்
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Recommended image2
டி20 World Cup: அரையிறுதியில் மாஸ் காட்டுமா இந்தியா..? கடந்த கால வரலாறு என்ன..?
Recommended image3
100 போட்டிகளுக்கு மேல் டக் அவுட்டில் அமர்ந்தே பாடம் கற்றுக் கொண்டேன்.. உருக்கமாக பேசிய சஞ்சு
Related Stories
Recommended image1
தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
Recommended image2
மோகன்லாலுக்கே டப் கொடுக்கும் சஞ்சு சாம்சன்.. 100 கோடி கிளப்.. சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved