MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND VS ENG: 2 முக்கிய வீரர்கள் விலகல்! 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்!

IND VS ENG: 2 முக்கிய வீரர்கள் விலகல்! 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்!

இந்திய அணியில் இருந்து ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகியுள்ளனர். இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Jul 21 2025, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IND vs ENG 4th Test: India Team Playing 11
Image Credit : Getty

IND vs ENG 4th Test: India Team Playing 11

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

24
நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங்
Image Credit : ANI

நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங்

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை வெல்லவோ அல்லது டிரா செய்யவோ வாய்ப்பு கிடைக்கும். ஆகவே 4வது டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக உள்ள நிலையில், ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 4வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பு செய்தார்.

மேட்ச் வின்னர் ஆகாஷ் தீப்

அர்ஷ்தீப் சிங்கை பொறுத்தவரை இந்த தொடரில் இடம்பெற்றாலும் ஒரு முறை கூட பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஏற்கெனவே 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்த ஆகாஷ் தீப் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 4வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆகவே நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகல் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
டியூக்ஸ் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையில்லையா? Dukes ball மீது விமர்சனங்கள் எழுவது ஏன்?
Related image2
இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது? ஓபனாக பேசிய சுப்மன் கில்!
34
சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ்
Image Credit : ANI

சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ்

இப்படியாக இந்திய அணி பெரும் சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் பெரும் சவால் காத்திருக்கிறது. ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் இல்லாததால், அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படலாம். சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மான்செஸ்டர் டெஸ்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் முக்கிய பவுலர்களாக இருப்பார்கள்.

கருண் நாயர் பேட்டிங் சொதப்பல்

நிதிஷ் குமார் ரெட்டியின் விலகல் ஆல்-ரவுண்டர் பிரிவில் காலியிடத்தை உருவாக்கியுள்ளது. ஷர்துல் தாக்கூர் 4வது டெஸ்ட்டில் களமிறங்கினாலும் அவரால் இவர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறி தான். மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு உதவும் என்பதால், குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங் வரிசையில் கருண் நாயர் பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால் சிக்கல் எழுந்தது.

44
இந்தியா ஒன்றில் கூட வென்றதில்லை
Image Credit : ANI

இந்தியா ஒன்றில் கூட வென்றதில்லை

மான்செஸ்டர் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியை கூட வென்றதில்லை.கடந்த 35 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. இந்த சவால்களையும், முக்கிய வீரர்களின் காயங்களையும் தாண்டி இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணியின் தலைமை மற்றும் மூத்த வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்தி, ஒரு சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து, தொடரை சமன் செய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Recommended image2
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Recommended image3
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
டியூக்ஸ் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையில்லையா? Dukes ball மீது விமர்சனங்கள் எழுவது ஏன்?
Recommended image2
இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது? ஓபனாக பேசிய சுப்மன் கில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved