MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மறந்தும் இந்த திசையில் தலை வைத்து தூங்காதீங்க.. நோய்கள் பெருகும்.. அறிவியலும் வாஸ்துவும் சொல்லும் காரணங்கள்!!

மறந்தும் இந்த திசையில் தலை வைத்து தூங்காதீங்க.. நோய்கள் பெருகும்.. அறிவியலும் வாஸ்துவும் சொல்லும் காரணங்கள்!!

வாஸ்துபடி சில திசைகளில் தலைவைத்து தூங்குவது அசுப பலன்களையும் நோயையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. 

2 Min read
Author : maria pani
Published : Jun 22 2023, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நம் வாழ்வில் தூக்கம் முக்கியமானது. நிம்மதியான தூக்கத்தை பலரும் எட்டாக்கனியாக பார்க்கும் காலம் இது. இதற்கு நாம் தூங்கும் திசையும் கூட காரணமாக இருக்கலாம். பல விஷயங்கள் நாம் தூங்கும் விதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தவறான திசையில் உங்கள் தலையை வைத்து தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாஸ்து படி தூங்கும் திசை என்னென்ன? எந்த பக்கம் தலை வைத்து தூங்க வேண்டும் என்று பார்ப்போம். 

26

கிழக்கில் தலை வைத்து உறங்குதல்: 

கிழக்கு நோக்கி தலை வைத்து உறங்குவதால் நன்மைகள் பெருகும். கிழக்கு திசையை தெய்வங்களின் திசையாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்தத் திசையில் தலை வைத்து உறங்கினால் தெய்வங்களின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரத்திலும் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் எப்பொழுதும் கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும், அது அவர்களின் கவனத்தை மேம்படுத்துகிறது. ஆனால் தூங்கும் போது கிழக்கு நோக்கி கால் வைக்கக் கூடாது. சாஸ்திரத்தில் இது அசுபமாக கருதப்படுகிறது.

36

தெற்கு நோக்கி தலை வைத்து உறங்குதல்: 

வாஸ்து சாஸ்திரப்படி தெற்கு நோக்கி தலை வைத்து உறங்குவது நல்லது. தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் எந்த மன பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள். தெற்கு நோக்கி உங்கள் கால்களை வைத்து தூங்க வேண்டாம். இது அறிவியல் பார்வையில் கூட தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது. சாஸ்திரத்தின் படி இது அசுபமாக கருதப்படுகிறது.

46

தூக்கக் கோளாறுகள்: 

வாஸ்துவில் வடக்கு மிகவும் மங்களகரமான திசையாகக் கருதப்பட்டாலும், இந்தத் திசையில் தூங்குவது ஆரோக்கியமானதல்ல. இந்த திசையில் தூங்குவதால், உடலில் நோய்கள் உருவாகின்றன. நாம் எப்போதும் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி மட்டுமே தலை வைத்து தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மறந்தும் வடக்கு மற்றும் மேற்கு நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள். ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வாழ்க்கையிலும் எதிர்மறை ஆற்றல் பெருகும். 

56

தூக்கம் தொடர்பான சில விஷயங்கள்: 

சாஸ்திரங்களின்படி, மாலையில் வீட்டிற்குள் தூங்கக்கூடாது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். தூங்கும் முன் கை, கால்களை கழுவ வேண்டும்.தூங்கும் முன் மனதை அமைதிப்படுத்தி கடவுளை தியானியுங்கள்.இரவில் வெகுநேரம் விழித்திருக்க வேண்டாம். 

66

வாஸ்து பிரச்சனை: 

உடைந்த கட்டில், சேதமான படுக்கை, அழுக்கு படுக்கைகள் மற்றும் பல் துலக்காமல் கெட்ட வாசனையுடன் தூங்காதீர்கள். ஒருபோதும் நிர்வாணமாக தூங்க வேண்டாம். வெறிச்சோடிய வீடு, மயானம், கருவறை, கோயில் போன்ற இடங்களில் இருட்டு அறையில் தூங்கவேண்டாம். 

இதையும் படிங்க: AC Bed Sheet: ஏசி பெட்சீட் தெரியுமா? அதுவும் வெறும் ரூ.699 தான்! இதை வாங்கிட்டா ஜில்லுனு தூக்கம் வர்றது உறுதி!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madurai chithirai thiruvizha 2026 கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சும் பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
Recommended image2
South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!
Recommended image3
Mohini Ekadashi 2026 மோகினி ஏகாதசி 2026: துன்பங்களை போக்கி மங்களம் தரும் மகா விரதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved