வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வரும். இவற்றை வீட்டில் வளர்த்தால், பணப் பிரச்சினை மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
astrology Mar 12 2026
Author: Ramprasath S Image Credits:Getty
Tamil
கள்ளிச் செடி அல்லது முள் செடிகள்
இந்த செடிகள் வீட்டில் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். முட்கள், வாழ்க்கையில் வரும் தடைகள் மற்றும் பணக் கஷ்டங்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.
Image credits: Pinterest
Tamil
சீமைக்கருவேல மரம்
இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால், குடும்ப உறுப்பினர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டைகளும் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
Image credits: Social media
Tamil
அரச மரம்
வீட்டு வளாகத்தில் அரச மரம் இருப்பது அசுபம் என்று வாஸ்து கூறுகிறது. இது வீட்டில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
Image credits: unsplash
Tamil
பால் வடியும் செடிகள்
சில செடிகளை உடைத்தால், வெள்ளையாகப் பால் வடியும். இதுபோன்ற செடிகளை வீட்டுக்குள் வைத்தால், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும், பண இழப்பும் ஏற்படலாம்.
Image credits: Social media
Tamil
வீட்டுக்குள் வேண்டாம்
எப்போதும் பசுமையான, முட்கள் இல்லாத செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும். முள் செடிகளை வீட்டுக்கு வெளியே அல்லது காம்பவுண்ட் அருகே வைக்கலாம். ஆனால், வீட்டுக்குள் மட்டும் வைக்க வேண்டாம்.