MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!

Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!

Facts: நூற்றுக்கணக்கான பறவைகள் கரண்ட் கம்பிகளில் அமர்ந்தும் அவற்றுக்கு ஷாக் அடிப்பதில்லை. இது ஏன் நடக்கிறது தெரியுமா? இதற்குப் பின்னால் உள்ள அறிவியலை தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 14 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மின்கம்பிகளில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை?
Image Credit : AI

மின்கம்பிகளில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை?

நமது ஊர்களில் உள்ள மின்கம்பிகளில் தினமும் காலையிலும், மாலையிலும் நூற்றுக்கணக்கான பறவைகள் அமர்ந்து இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதை பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும். பறவைகளின் அழகை தாண்டி மின்கம்பிகளில் அந்த பறவைகள் அமர்ந்திருந்தும் அவற்றுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? நமது கை தெரியாமல் சுவிட்ச் பாக்ஸில் பட்டாலே ஷாக் அடிக்கிறது. ஆனால் மிகப்பெரிய மின் அழுத்தம் நிறைந்த மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? இதற்கு பின்னால் பெரிய அறிவியல் உள்ளது.

இதையும் படிங்க: Black Pepper: மிளகு ஒரிஜினலா? கலப்படமா? எளிதாக கண்டுபிடிக்க டம்ளர் தண்ணீர் போதும்! ஈஸி ட்ரிக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இயற்பியல் காரணம் இதுதான்
Image Credit : Pixabay

இயற்பியல் காரணம் இதுதான்

இயற்பியல் விதிகளின்படி, இரண்டு புள்ளிகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே மின்சாரம் பாயும். ஒரு பறவை ஒரே கம்பியில் இரண்டு கால்களையும் வைத்து அமரும்போது, அதன் கால்களுக்கு இடையே எந்த மின்னழுத்த வேறுபாடும் ஏற்படுவதில்லை. இதனால், மின்சாரம் பறவையின் உடல் வழியாகப் பாயாமல், கம்பி வழியாகவே நேராகச் சென்றுவிடுகிறது.

பறவைகளூக்கு ஏன் பாதிப்பு ஏற்படுவதில்லை?

பறவைகளுக்கு ஷாக் அடிக்காததற்கு இன்னொரு காரணம், மின் சுற்று முழுமையடையாமல் இருப்பதுதான். மின்சாரம் பாய, அது அதிக வோல்டேஜில் இருந்து பூஜ்ஜிய வோல்டேஜ் உள்ள பகுதியை நோக்கி ஒரு முழுமையான சுற்றை உருவாக்க வேண்டும். பறவை கம்பியில் மட்டுமே அமர்ந்திருப்பதால், தரை அல்லது வேறு எந்தப் பொருளுடனும் அதற்குத் தொடர்பு இருப்பதில்லை.

இதனால் மின் சுற்று முழுமையடையாததால், பறவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதுவே மனிதர்கள் தரையில் நின்றுகொண்டு கம்பியைத் தொட்டால், நம் உடல் ஒரு கடத்தியாக மாறி, மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து மின் சுற்று முழுமையடைவதால் ஷாக் அடிக்கிறது.

இதையும் படிங்க: Boiled Eggs: ஃப்ரிட்ஜில் வச்ச அவிச்ச முட்டை.. எத்தனை நாள் வரை சேஃப்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு!

Related Articles

Related image1
இந்த '3' பறவைகள் உங்கள் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும்!!
Related image2
Bird Flight: பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்குது? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸ் இருக்கா!
34
சில சமயங்களில் பறவைகளுக்கும் பாதிப்பு இருக்கும்
Image Credit : Pixabay

சில சமயங்களில் பறவைகளுக்கும் பாதிப்பு இருக்கும்

சில சமயங்களில் பறவைகளுக்கும் மின்சார அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு பறவை ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும்போது, அதன் இறக்கை அல்லது உடல் தவறுதலாக அருகிலுள்ள மற்றொரு கம்பியைத் தொட்டால், இரண்டு கம்பிகளுக்கும் இடையே உள்ள அதிக மின்னழுத்த வேறுபாடு காரணமாக, அதன் உடல் வழியாக மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்துவிடும். குறிப்பாக, கழுகுகள், கொக்குகள் போன்ற பெரிய பறவைகள், பறக்கும்போது இரண்டு கம்பிகளை ஒரே நேரத்தில் தொட்டுவிடுவதால், மின்சாரம் தாக்கி இறக்கின்றன.

இதையும் படிங்க: RO Water: RO வாட்டர் குடித்தால் முடி கொட்டுமா? அதிர்ச்சி தரும் மருத்துவ உண்மை.. முழு விவரம்!

44
பறவைகளில், தோல் உடம்பு சக்திவாய்ந்தவை
Image Credit : Gemini AI

பறவைகளில், தோல் உடம்பு சக்திவாய்ந்தவை

மின்சாரம் எப்போதும் குறைந்த மின்தடை கொண்ட பாதையிலேயே எளிதாகப் பாயும். மின்சாரக் கம்பிகள் (அலுமினியம்/தாமிரம்) மிகக் குறைந்த மின்தடை உடையவை. ஆனால் பறவையின் தோல் மற்றும் உடல் திசுக்கள் கம்பியை விடப் பல மடங்கு அதிக மின்தடை கொண்டவை. இதனால் மின்சாரம் பறவையின் உடலைத் தவிர்த்து, கம்பியின் வழியே நேராகப் பாய்கிறது.

பறவைகள் இரு கம்பிகளைத் தொடுவது மட்டுமன்றி, ஒரு கம்பியில் அமர்ந்தபடியே மின்கம்பத்தின் உலோகப் பகுதி அல்லது மின்மாற்றியை தொட்டாலும் தரைத் தொடர்பு ஏற்பட்டு ஷாக் அடிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Slap Chicken : 23,034 முறை சிக்கனை பளார்-பளார்னு அடிச்சா வெந்துடுமா? உண்மை என்ன?
Recommended image2
Travel Guide : மழைக்காலத்துல ஜாலியா சுத்த உலகின் டாப் 7 சுத்தமான நாடுகள்!
Recommended image3
Men's Bracelets : ஆண்கள் கைகளுக்கு எடுப்பாக ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ்!
Related Stories
Recommended image1
இந்த '3' பறவைகள் உங்கள் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும்!!
Recommended image2
Bird Flight: பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்குது? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸ் இருக்கா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved