- Home
- உடல்நலம்
- பெற்றோர் கண்டிப்பாக தெரிஞ்சுக்கனும்!! குழந்தைகள் முன் டிரஸ் மாற்றக்கூடாது - ஏன் தெரியுமா?
பெற்றோர் கண்டிப்பாக தெரிஞ்சுக்கனும்!! குழந்தைகள் முன் டிரஸ் மாற்றக்கூடாது - ஏன் தெரியுமா?
குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் ஆடை மாற்றக்கூடாது என்பதை பற்றி இங்கு காணலாம்.

Why Parents Should Avoid Changing Clothes in Front of Their Child : ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்களுக்கு சிறந்ததையும் கொடுப்பார்கள். மேலும் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். குழந்தைகள் சமுதாயத்தில் நல்ல ஒரு நபராக வளர வேண்டும் என்று பெற்றோர்கள் பல விஷயங்கள் செய்தாலும் குழந்தைகள் முன் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் குழந்தைகள் முன் ஆடைகளை மாற்றுவது. பெற்றோர்கள் குழந்தைகள் முன் ஏன் ஆடைகளை மாற்றக்கூடாது என்பதற்கான காரணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பார்ப்பதை கற்றுக்கொள்வார்கள்:
பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகள் முன் ஆடைகளை மாற்றுவது நல்லதல்ல. எவ்வளவு சிறிய குழந்தைகளாக இருந்தாலும் சரி, குழந்தைகளும் ஒருபோதும் ஆடைகளை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரண்டு வயதில் இருந்து குழந்தைகள் தங்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை புரிந்து கொள்ள தொடங்கி விடுவார்கள் மற்றும் அதை அப்படியே பின்பற்றுவார்கள். இந்த காரணத்திற்காக தான் நீங்கள் உங்கள் குழந்தைகள் முன் ஆடைகள் மாற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.
தனியுரிமை மதித்தல்:
தனிப்பட்ட இடத்தில் தான் ஆடைகளை மாற்ற வேண்டும். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தனியுரிமையின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். இதுதவிர, அவர்களது உடலை யாரும் பார்க்க கூடாது என்பது அறிந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: அப்பா தான் சூப்பர் ஹீரோ.. அப்பா மகள் நெருங்கிய பிணைப்புக்கு இதுதான் காரணம்!!
குழப்பம் அடையலாம்:
சிறு குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஆடை மாற்றும்போது குழந்தைகள் குழப்பம் அடையலாம் அல்லது அசாகரியமாக உணரலாம். எனவே குழந்தைகள் முன் அடை மாற்றுவதே தவிர்க்கவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு 'ட்ரெஸ்' வாங்குறப்ப இதை கவனிப்பீங்களா? வெயிலில் கண்டிப்பா பார்க்கனும்
எல்லைகளை அமைப்பது:
ஆடைகளை மாற்றுவதை சுற்றி எல்லைகளை நிர்ணயிப்பது தனிப்பட்ட முறையில் பொருத்தமானவையாகும். ஆனால் பொது வெளியில் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.. இதனால் வெவ்வேறு வெவ்வேறு இடங்களில் பொருத்தமான நடத்தை காண உணர்வுகள் வளர்க்க இது அவர்களுக்கு உதவும்.