Kidney Cancer: சிறுநீரகப் புற்றுநோய்! ஆரம்பத்திலேயே எச்சரிக்கும் 3 முக்கிய அறிகுறிகள்!
Symptoms: மனிதர்களின் மத்தியில் சிறுநீரக புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுநீரகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டியாக மாறுவதையே சிறுநீரகப் புற்றுநோய் என்கிறோம்.

சிறுநீரகப் புற்றுநோயின் மூன்று அறிகுறிகள்
சிறுநீரகப் புற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுநீரகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டியாக மாறுவதையே சிறுநீரகப் புற்றுநோய் என்கிறோம். இது சிறுநீர் மண்டலத்தை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று.
புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்
சிறுநீரகத்தில் உள்ள செல்கள் பெருகி கட்டிகளாக மாறும்போது சிறுநீரகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் மிகவும் பொதுவான வகை 'ரீனல் செல் கார்சினோமா' (RCC). இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை எளிதாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரில் ரத்தம்
சிறுநீரக கற்கள்
சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள் போன்ற காரணங்களாலும் சிறுநீரில் ரத்தம் வரலாம். ஆனால், இது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களையே இது பாதிக்கிறது. சரியான காரணத்தை அறிய மருத்துவப் பரிசோதனை அவசியம்.
தொடர்ச்சியான வலி
சிறுநீரகத்தில் கட்டி வளரும்போது, அது அருகிலுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை அழுத்துகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், தொடர்ச்சியாக வலி நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.

