அடிக்கும் வெயிலிலும் துரத்தும் சளி பிரச்சினை; விரட்டியடிக்கும் '5' வீட்டு வைத்தியங்கள்!
வெயில் காலத்திலும் சளி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவும்.

Natural Ways To Get Rid Of A Cold : கோடை காலத்திலும் சளி பிடிக்குமா? ஆனால் இது எல்லா பருவ காலத்திலும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை தான். குளிர் காலத்தில் தான் சளி பிடிக்கும் என்று பலர் நினைப்பதுண்டு ஆனால் கோடை காலத்திலும் சளி பிரச்சனை ஏற்படலாம். கோடை காலத்தில் சளி பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ற வைரஸ் தான். இது பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவர் பயன்படுத்திய பொருள் மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கும் பரவுகிறது.
கோடைகால சளி பிரச்சனை வருவதற்கான அறிகுறிகள்:
தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டைப்பும் மற்றும் இருமல். சில சமயம் காய்ச்சலாலும் இந்த பிரச்சனை உண்டாகலாம்.
இஞ்சி
ஒரு கிளாஸ் தண்ணீரை சூடாக்கவும். அதில் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கு மேல் குளிக்க வேண்டாம் இஞ்சியில் இருக்கும் அலர்ஜி எதிர்க்கும் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நாசிப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்று அதிகப்படியான சளி உற்பத்தியும் குறைக்கும்.
மஞ்சள்
சூடான தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அதை கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். தினமும் 3-4 மணி நேரம் இடைவெளியில் இப்படி செய்ய வேண்டும். அதுபோல பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து இரவு குடிக்கலாம். மஞ்சள் இருக்கும் பண்புகள் சளி தொல்லையில் இருந்து விரிவாக நிவாரணம் அளிக்கும்.
இதையும் படிங்க: கோடையில் கவனம்!! வெயில் காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் தெரியுமா?
ஆப்பிள் சைடர் வினிகர்
ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்றாக கலக்கவும். பிறகு அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை தினமும் குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கிவிடும். ஆப்பிள் சைடர் வினிகர் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை விரைவாக கொல்ல உதவும்.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்கனும்? இதய நோயாளிகளே இதை கவனிங்க
இவற்றையும் செய்:
1. தொற்று நோயை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றும் நூல்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
2. ஆரோக்கியமாக இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, போதுமான தூக்கம் மிகவும் அவசியம். இடைவிடாத செயல்பாடு அதிகரிக்கும். இதனால் உடலுக்கு பாதிப்பு தான் ஏற்படும்.
3. கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றுமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக காஃபின் மற்றும் மதுபானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், நெஞ்சு எரிச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆவி பிடித்தல் நல்லது.
5. சளி பிரச்சனை உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பதன் மூலம் தொற்றுப் பெறுவதை தடுக்கலாம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தொட்டால் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அது மட்டுமல்லாமல் வெளியில் சென்று வீட்டிற்குள் வந்தவுடன் கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.