MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • காசே செலவு செய்யாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பொடுகை வேறோடு அழிக்க இப்படி செய்தால் போதும்.

காசே செலவு செய்யாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பொடுகை வேறோடு அழிக்க இப்படி செய்தால் போதும்.

பொடுகை போக்க ஏராளமானவற்றை மார்க்கெட்களில் இருந்து வாங்கி ட்ரை செய்து பார்த்து இருப்பீர்கள். ஆனால் காசே செலவு பண்ணாமல் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பொடுகை அடியோடு அழித்துவிடலாம். அதற்கு என்ன,எப்படி செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் காணலாம்.

3 Min read
Dinesh TG
Published : Mar 16 2023, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம்மில் பலருக்கும் முடி உதிர்தல்,பேன் தொல்லை,பொடுகு பிரச்சனை என்று பல்வேரு முடி கூந்தல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளன.அந்த வகையில் இன்று நாம் பொடுகை பிரச்சனையை பற்றி இன்று நாம் காண உள்ளோம்.

தளி முடியில் பொடுகு ஏற்பட நமது உடலில் இருக்கும் சில நோய் அறிகுறிகள், ஊட்டச்சத்துக் குறைபாடு , நாம் பயன்படுத்திய ரசாயனம் சேர்ந்த பொருட்கள் எனக் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதுவரையில் நீங்கள் பொடுகை போக்க ஏராளமானவற்றை மார்க்கெட்களில் இருந்து வாங்கி ட்ரை செய்து பார்த்து இருப்பீர்கள். கடைகளில் இருந்து வாங்கப்படும் ரசாயனம் சேர்ந்தவற்றை முடியில் பயப்படுத்துவதால் பக்க விளைவு ஏற்படுமே தவிர, பொடுகு குறைந்த பாடில்லை என்று அலுத்துப் போனவர்கள் பலர் உள்ளனர்.

ஆனால் காசு செலவு பண்ணாமல் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பொடுகை அடியோடு அழித்துவிடலாம். அதற்கு என்ன,எப்படி செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் காணலாம்.

பொடுகு பிரச்சனை :

தலையில் செதில் போன்ற துகள்கள் கொண்ட பொடுகு ஒரு நாட்பட்ட நிலையாகும். ஆனால் அதனை நாம் பல சந்தர்ப்பங்களில் அதை கட்டுப்படுத்தலாம்.

குறைவான அளவில் இருக்கும் பொடுகினை சில ஷாம்பூக்களை பயன்படுத்தபோக்கலாம். அதி தீவிரமான பொடுகு பிரச்சனை எனில் சில குறிப்பிட்ட மருத்துவ ஷாம்பூக்களை பயன்படுத்தி போக்கலாம்.

25

பொடுகு ஏற்படக் காரணம் :

தலை சருமத்தில் சில சிறிய கட்டிகளை, பொடுகு செதில்களால் முற்றிலும் மூடப்பட்டிருக்கும். இது பொதுவாக எண்ணெய் சுரப்பிகள் அதிகமுள்ள பகுதிகளையே அனேகமாக பாதிக்கிறது.

சீகற்காய் அல்லது ஷாம்புவினை போதுமான அளவில் பயன்படுத்தமை , தலை மற்றும் கூந்தலை சரியாக தண்ணீரில் அலசாமல் இருத்தல் போன்றவையே இறந்த மற்றும் எண்ணெய் செல்கள் உருவாகிறது. அதுவே பொடுகு ஏற்பட முக்கிய காரணமாகும். 

இப்போது நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து எவ்வாறு பொடுகினை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்:
 

பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் தேங்காய் எண்ணெய் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது சருமத்தில் செதில் செதிலாக உதிரும் பொடுகை சிறப்பாக கட்டுப்படுத்த பயன்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது:

உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையில் ஷாம்பூ போட்டு அலசி விட வேண்டும். இதனை நீங்கள் வாரத்தில் 2 முறை செய்து வர சில மாதங்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

35

​வெங்காயச் சாறு:

பைட்டோ கெமிக்கல் என்ற வேதிப்பொருள் வெங்காயச்சாறில் அதிகமாக இருப்பதால் இது பொடுகை தடுக்க அதிக அளவில் உதவுகிறது ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன . இதனை மேற்பூச்சாக தேய்க்கும் போது சருமத்தில் செதில்கள் ஏற்படுவதை தடுத்து பொடுகை அதிக அளவில் குறைக்கிறது.

எப்படி பயன்படுத்துவது:

பாதி அளவிலான பெரிய வெங்காயத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து அதன் சாறைப் பிழிந்து வடிகட்டி அதனை தலை முழுவதும் தேய்த்து 1 மணி நேரதிற்கு பிறகு தலையை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்தில் 2 நாட்கள் இதை செய்து வரலாம்.

மூட்டுவலியை மட்டுமில்ல முன்ஜென்ம வினைகளையும் போக்கக்கூடிய சக்தி இந்த ''பிரண்டைக்கு'' உண்டு என்று தெரியுமா!

45

​சோற்றுக் கற்றாழை:

பல்வேறு சரும மற்றும் தலை பிரச்சனைகளுக்கு சோற்றுக் கற்றாழை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்ட்டி ஃபங்கல் போன்ற பண்புகள் பொடுகு உள்ளிட்ட அனைத்து விதமான பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போரிடுகிறது.

எப்படி பயன்படுத்துவது:

கொஞ்சம் கற்றாழை ஜெல்லை தலை முழுவதும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு 1 மணி நேரத்திற்கு பிறகு தலையை அலசி விட வேண்டும் இதனை வாரத்தில் 2 அல்லது 3 முறை வரை செய்து வர நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

55

​பூண்டு:

பூண்டில் இருக்கும் பயோ ஆக்டிவ் என்ற வேதிப்பொருள் பொடுகு உண்டாக காரணமாக இருக்கும் பூஞ்சை தொற்றுக்களை தடுத்து நிறுத்துகிறது.

எப்படி பயன்படுத்துவது:

அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து சூடாக்கி, நசுக்கி வைத்துள்ள சில பூண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் வரை சூடாக்கி பின் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த ஆயிலை தலையில் தேய்த்து சுமார் 1 மணி நேரத்திற்கு பின் தலையை அலசி விட வேண்டும். இதனை வாரம் 2 முறை செய்து வரலாம்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved