MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை கலந்து, தினமும் தலையில் தடவினால்.. முடி அடர்த்தியா காடு மாதிரி வளரும்!!

தேங்காய் எண்ணெயில் வேம்பாளம் பட்டையை கலந்து, தினமும் தலையில் தடவினால்.. முடி அடர்த்தியா காடு மாதிரி வளரும்!!

Hair growth tips tamil: தலைமுடி அடர்த்தியாக வளர வேம்பாளம் பட்டையை நாட்டுமருந்து கடையில் வாங்கி பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு முடி காடு மாதிரி வளரும். 

2 Min read
maria pani
Published : Apr 03 2023, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தலைமுடி உதிர்வுக்கு வாழ்க்கை முறை, உணவு பழக்கம், நல்ல தூக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் நாம் முறையாக பராமரிக்காததே தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம். முடி உதிர்வு, அடர்த்தியின்மை, நரைமுடி, இளநரை ஆகியவை ஏற்படாமல் தடுக்க, முடி நன்கு வளர்ந்து வர வேம்பாளம் பட்டை நமக்கு உதவும். இதை எப்படி தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

25

பண்டைய காலம் முதலாகவே முடி உதிர்வதற்கு வேம்பாளம் பட்டை தான் நல்ல தீர்வாக இருந்துள்ளது. இதை தேங்காய் எண்ணெயில் சேர்த்தால் சிகப்பு வண்ணமாக மாறிவிடும். இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளலாம். ரொம்பவும் விலை குறைவு. 1 கைப்பிடி பட்டை எடுத்து, 100 மிலி தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வையுங்கள். இந்த பட்டைகள் நாள் முழுக்க எண்ணெயில் ஊற வேண்டும். சிவப்பு நிறமாக மாறிவிடும். இதை வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள். 

35

வேம்பாளம் பட்டை கலந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ் தலைமுடிகளை நன்கு வளர தூண்டும். வேம்பாளம் பட்டையின் சாறு, தலைமுடியின் வேர்க்கால்களில் உள்ள தொற்றுகளை வேரோடு விரட்டும். பொடுகு தொல்லை தீர்ந்துவிடும். தலையில் உள்ள சூட்டை விரட்டி முடி வளர்ச்சியை தூண்டும். 

45

இளநரை, நரை முடி ஆகிய பிரச்சினைகளை விரட்டி தலைமுடியௌ ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றும். உதிர்ந்த இடத்தில் புதிய முடியை தளிர்க்க செய்யும். தலையில் தொற்றுக்கள் எதுவும் ஏற்படாது. 

இதையும் படிங்க: பேரழகு பெற! முகம் கழுவும்போது இந்த தப்பு பண்ணாதீங்க, இத சரி பண்ணினா எல்லா சரும பிரச்சனையும் 1 வழியில் தீரும்!

55

பொடுகு, முடி உதிர்வு, நரை முடி எல்லாவற்றையும் அடியோடு நீக்க வேம்பாளம் பட்டையை பயன்படுத்தி பாருங்கள். தலைமுடிக்கு எத்தனையோ இயற்கை முறைகளை பின்பற்றியிருப்பீர்கள். ஆனால் இந்த முறை உங்களுக்கு சிறந்த பலன்களை தரும். 

இதையும் படிங்க: மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா! எந்த மருந்தும் பக்க விளைவுகளும் இல்லாத ஒரே வழி!!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved