MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா! எந்த மருந்தும் பக்க விளைவுகளும் இல்லாத ஒரே வழி!!

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா! எந்த மருந்தும் பக்க விளைவுகளும் இல்லாத ஒரே வழி!!

வெளிமூலம், உள்மூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு போன்ற பிரச்சனைகளை 1 வாரத்தில் இருந்து 15 நாள்களுக்கு குணப்படுத்த சிறந்த முறையை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : maria pani
Published : Apr 03 2023, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மூல நோய் இருப்பவர்கள் நிம்மதியாக ஒரு வேலையும் செய்ய முடியாது. மலம் கழிப்பதை நினைத்தாலே வலியும், அருவருப்பும், ரத்தக்கசிவு குறித்த ஒவ்வாமையும் ஏற்பட்டு வரும். ரொம்ப நாளாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. குத பகுதியில் அரிப்பு, வலி போன்றவை ஏற்படும். குடல் இயக்கத்தில் குறைபாடும், ரத்தக்கசிவும் இருக்கும். இந்த நோய் ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ரொம்ப எடை தூக்குவது, நார்ச்சத்து குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுதல், காரம், மசாலா அதிகமாக இருக்கும் உணவை எடுத்து கொள்ளுதல், அதிக உடல் எடை, ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்வதும் மூல நோய் ஏற்பட காரணங்களாகும். இந்த மூல நோய் எப்படி விரட்டியடிக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

35

ஒரு மண்சட்டி அல்லது சிறிய மண்பானையை எடுத்து கொள்ளுங்கள். மண்பாத்திரத்தில் தான் இந்த நோய்க்கான தீர்வு உள்ளது. மற்ற பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. இந்த மண்பாத்திரத்தில் 1 கப், ஆறிய சோறு போட்டு கொள்ளுங்கள். இதில் 2, டம்ளர் தண்ணீர், பொடியாக நறுக்கிய 5 சின்ன வெங்காயம், கல் உப்பு போட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் கரிக்கும் சுவையில் உப்பு போட்டு கொள்ளுங்கள். இதை மூடி வைத்துவிடுங்கள். இது 8 முதல் 12 மணி நேரம் நன்கு ஊறிவர வேண்டும். 

45

இரவில் இந்த செய்முறையை செய்வது நல்லது. படுக்கும் முன்பு இந்த பொருள்களை மண்சட்டியில் போட்டு வைத்தால் காலையில் தயாராகிவிடும். இந்த ஊறலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். காலையில் இதை வெறும் வயிற்றில் இந்த மண்சட்டியில் இருக்கும் ஊறிய பழைய கஞ்சி குடிக்கவேண்டும். குடிக்கும் முன்பு கைகளால் அதை கரைத்து கூழ் மாதிரி ஆனதும் குடியுங்கள். இந்த அற்புத பானத்தை குடித்த 30 நிமிடங்களில் மலக்குடலில் இருக்கும் அசடுகள் கழிவுகள் வெளியே வந்துவிடும். இப்படி 1 வாரம் முதல் 2 வாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

55

இந்த கஞ்சியை குடிக்கும் காலங்களில் உப்பு, புளி, காரம் ஆகியவை உணவில் குறைவாக சேருங்கள். நாட்டு மருந்து கடைகளில் துத்திக் கீரை பொடியை கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி மோரில் கலக்கி பருகுங்கள். துத்திக் கீரை உங்களுக்கு கிடைத்தால் அதை சமைத்து சாப்பிடுங்கள். இந்த விஷயங்களை பின்பற்றினால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் மூல நோயை விரட்டி அடிக்கலாம். 

இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்கள்! தொண்டை வலி முதல் மண்டை வலி வரை.. நிவாரணம் தரும் அற்புத பொருள்!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Papaya Benefits: தினமும் பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!
Recommended image2
Guava Benefits: தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்!
Recommended image3
Varicose Veins: இந்தியர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த பிரச்சனை.! அலட்சியம் வேண்டாம்.! உயிருக்கே உலை வைக்கும்.! எச்சரிக்கும் மருத்துவர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved