MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Hair Fall : முடி ரொம்ப உதிருதா? இந்த 2 பொருள் போதும்! இனி உதிராது

Hair Fall : முடி ரொம்ப உதிருதா? இந்த 2 பொருள் போதும்! இனி உதிராது

உங்களது தலை முடி அதிகமாக உதிர்கிறது என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். முடி உதிர்தல் பிரச்சனை இனி இருக்காது.

2 Min read
Kalai Selvi
Published : Jun 30 2025, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Freepik

தற்போது பலரும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் பல காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. முடி உதிர்தலுக்கு சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, உடல்நல பிரச்சனைகள், மாசுபாடு, இரசாயன பொருட்களின் பயன்பாடு, பொடுகு தொல்லை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 பொருட்களை பயன்படுத்தி முடி உதிர்தல் பிரச்சனையை குறைத்து விடலாம் தெரியுமா? அவை என்ன? அவற்றை பயன்படுத்துவது எப்படி என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
Image Credit : social media

முடிக்கு அரிசி நீர் :

அரிசி நீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், அவை முடி உதிதலை தடுத்து முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். அதுமட்டுமல்லாமல் முடியை பட்டு போல மென்மையாக மாற்றும். ஆனால் அரிசி முடிவுடன் நீங்கள் வெந்தயத்தை பயன்படுத்தினால் கூந்தல் ஆரோக்கியமாகவும் மாறும் மற்றும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். இப்போது அரிசி நீர் மற்றும் வெந்தயத்தை கூந்தலுக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

Related Articles

Related image1
hair fall: வெண்டைக்காய் தண்ணீர் மட்டும் போதும்...இனி முடி உதிர்விற்கு "குட் பை" சொல்லிடலாம்
Related image2
hair fall: கொத்து கொத்தாக முடி கொட்டுதா? அப்போ இந்த 9 உணவுகளை கண்டிப்பாக தவிர்த்துடுங்க
34
Image Credit : Getty

அரசி நீர் மற்றும் வெந்தயம் :

சிறிதளவு அரிசி மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து விட்டுவிட்டு பிறகு மறுநாள் காலை வெந்தயத்தை மட்டும் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அரிசியில் இருந்து நீரை மட்டும் எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரைத்து வைத்த வெந்தயத்தை சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது அதை வடிகட்டிக் கொள்ளுங்கள். இல்லையெனில் கெட்டியாகிவிடும்.

44
Image Credit : stockPhoto

வடிகட்டிய இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இப்போது இந்த கலவையை உச்சந்தலையில் தடவி பத்து நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இப்படி செய்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நின்றுவிடும். மேலும் முடி அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும். பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
அழகு
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved