MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!

தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!

தேங்காய் மட்டுமல்ல, தேங்காய் நாரும் ரொம்ப உபயோகமானது. அதனை எவ்வாறு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : maria pani
Published : Apr 20 2023, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பெரும்பாலான வீடுகளில் தேங்காய் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு தேங்காய் சிறந்தது. ஆனால் தேங்காயை எடுத்துவிட்டு அதன் நாரை எல்லோரும் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதை உபயோகமற்றதாக கருதுவதே அதற்கு காரணம். பொதுவாக தேங்காய் நாரை தூக்கி எறியக்கூடாது. அதில் அவ்வளவு நன்மைகள் இருக்கின்றன. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கு காணலாம். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வீக்கம் நீங்கும்!! 

பெரும்பாலும் காயம் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். காயத்திற்குப் பிறகு வீங்கிய இடத்தில் தேங்காய் எண்ணெயையும் தடவுங்கள். தேங்காய் நாரை பொடி செய்து, அதனுடன் மஞ்சளைக் கலந்து, வீக்கமுள்ள இடத்தில் போட்டால் வீக்கம் குறையும். 

பற்கள் ஜொலிக்கும்!!  

மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்ற தேங்காய் நார் உதவும். தேங்காய் நாரை எரித்து அதை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியில் சோடாவைக் கலந்து, பற்களில் லேசாக தேய்க்கவும். பற்கள் வெள்ளை நிறமாக மாறும்.

35

கருமையான முடி!! 

தேங்காய் நார் கொண்டு வெள்ளை முடியை கூட கருப்பாக்க முடியும். தேங்காய் நாரை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடேற்றி பின்னர் அதை அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்தால் நல்ல பலனளிக்கும். இதை ஹேர் பேக் போல பயன்படுத்தலாம். தேங்காய் நார் பொடியை எண்ணெயில் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் தலையை அலசி கொள்ளலாம். இப்படி செய்து வந்தால் சில நாள்களில் முடி கருப்பாக மாறும். 

இதையும் படிங்க: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!

45

கை, கால் கருமை நீங்க! 

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் கை வைக்கும் அளவு சூட்டில் தயார் செய்யுங்கள். அதில் கொஞ்சம் தேன் கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தேங்காய் நாரில் எடுத்து கருமையான முழங்கை, கால் ஆகிய இடங்களில் கொஞ்சம் ஸ்கிரப் செய்து கொள்ளுங்கள். லேசாக செய்தால் போதும். நம்முடைய சருமம் மென்மையானது அதனால் அதில் வேகமாகவோ வலி ஏற்படும் அளவிலோ ஸ்கிரப் செய்வது தவறு. இதை செய்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும். 

 

55

மாதவிடாய் வலி 

தேங்காய் நார் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. தேங்காய் நாரை எரித்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து குடித்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

இதையும் படிங்க: Coffee: காபி குடித்தால் தான் வேலையே ஓடுமா? ஆனா 2 முறைக்கு மேல காபி குடித்தால் பாதிப்பு! இத்தனை தீமைகள் இருக்கு

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pumpkin Seeds: முகப்பருவை விரட்ட பூசணி விதை உதவுமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
Recommended image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Recommended image3
கோடையில் பளபளப்பான சருமம் பெற சர்க்கரை ஸ்க்ரப் பயன்படுத்துவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved