அடுத்த 10 ஆண்டுகள்.. சனி பகவான் பாடாய்படுத்தப் போகிறார்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவைதான்..
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்போது சனியின் பார்வையில் இருந்து சில ராசிகள் தையா மற்றும் சதே சதியின் பலன்களை பெறுவார்கள்.
சனி பகவான் மட்டும் தான் 9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கபப்டும் ஒரே கிரகம் ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்போது சனியின் பார்வையில் இருந்து சில ராசிகள் தையா மற்றும் சதே சதியின் பலன்களை பெறுவார்கள். ஜோதிடத்தின் படி, சனி சதே சதி மற்றும் தையா ஒரு ராசி அடையாளத்தின் வாழ்நாளில் ஒருமுறை வரும். அதே நேரத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.ர்கள்.
தற்போது 2024-ம் ஆண்டு கும்ப ராசியில் சனி இருப்பதால் கும்பம், மகரம் மீனம் ஆகிய ராசிகளுக்கு சனி சதே கதியின் பலன்கள் கிடைக்கும். அதே நேரம் கடகம், விருச்சிக ராசியில் தையா கதியின் பலன்களும் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த மாற்றத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனியின் எந்தெந்த பலனை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு தற்போது சதே சதி நடந்து கொண்டிருப்பதால் ஒரு வருடம் கழித்து 29 மார்ச் 2025 அன்று முடியும். கும்ப ராசியினருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படும். ஆனால் மகர ராசிக்கு 2025 மார்ச் 29 அன்று சதே சதி முடிவடைவதால் அவர்கள் வக்ர கதியில் இருந்து விடுபடுவார்கள்.
மார்ச் 2025-ல் சனி தனது ராசியை மாற்றுகிறார். இதனால் மேஷ ராசியினருக்கு இந்த கடின கலம் ஜூலை 2033-ம் ஆண்டு வரை நீடிக்கும். அதே போல் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் 3, 2027 முதல் ஜூலை 13, 2034 வரை நீடிக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 08, 2029 தொடங்கி, ஆகட்ஸ்ட் 27 2036 வரை சனியின் சதே சதி தாக்கம் இருக்கும். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடக ராசிக்கு 2032, மே 31 தொடங்கி அக்டோபர் 2038 வரை நீடிக்கிறது. தற்போது கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனியின் அழுத்தத்தில் இருப்பதால் இவர்கள் 2025-ம் ஆண்டுக்கு பிறகு அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.