சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் சரியா படிக்க முடியல! பெற்றோர் ஆசை நிறைவேறவில்லை.. ஹர்ஷினி 10th மார்க் இது தான்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பலரது குரலில் பாடி பிரபலமான ஹர்ஷினி நேத்ரா இந்த வருடம் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
கடந்த வாரம், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்... இன்று 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டும், வழக்கம் போல் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் கஷ்டங்களை கடந்து சாதித்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு... பல பிரபலங்களின் குரலில் பாடி ரசிகர்களை அசர வைத்த, ஹர்ஷினி நேத்ரா 10-ஆம் ஆண்டு தேர்வு எழுதிய நிலையில், பெற்றோர் எதிர்பார்த்த மதிப்பெண்ணை எடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
10-ஆம் வகுப்பு பொது தேர்வில், நேத்ரா 384/500 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், பெற்றோர் ஆசை பட்டது போல் 450-க்கு மேல் என்னால் மார்க் எடுக்க முடியவில்லை. இருந்தாலும் இதுவும் நல்ல மார்க் என்றே நினைகிறேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் - படிப்பிலும் சம அளவு கவனம் செலுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் ஹர்ஷினி நேத்ரா, 11-ஆம் வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுத்து படிக்க விரும்புவதாகவும், 10 வகுப்பு தேர்வில் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றாவிட்டாலும் கண்டிப்பாக 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவேன் என தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.