Ninaithen Vanthaai: சுடரை பாதியில் இறக்கி விட்ட எழில்! கடைசியில் காத்திருந்த ஷாக் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட மனோகரி சுடரிடம் வாக்குவாதம் செய்ய எழில் அவளுக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Ninaithen Vanthaai Serial
அதாவது, எழில் குழந்தைகளை ஸ்கூலுக்கு அழைத்து செல்லும் போது வழியில் காரை நிறுத்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு என்று சொல்லி ஆளாளுக்கு ஒரு புக்கை வாங்கி கொடுத்து ஸ்கூலுக்குள் அனுப்பி வைக்கிறான்.
Ninaithen Vanthaai Serial
இதனையடுத்து சுடரும் எழிலும் காரில் வந்து கொண்டிருக்க சுடர் எழிலை கலாய்க்கிறாள், குழந்தைகளுக்கு என்ன கிப்ட் வாங்கி கொடுக்கிறதுனு கூட உங்களுக்கு தெரியல, கவினுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் பிடிக்கும்னு தெரியுமா? காவியாவுக்கு எது பிடிக்கும்னு தெரியுமா? என்று கேள்வி கேட்க எழில் எதுவும் தெரியாமல் முழிக்கிறான்.
Ninaithen Vanthaai Serial
மேலும் பாதியில் காரை நிறுத்தி சுடரை கீழே இறக்கி விட அவள் நீங்க வர வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன் என்று சவால் விட்டு காத்துக் கொண்டிருக்கிறாள். அஞ்சலி சுடருக்காக காத்திருக்க எழில் வீட்டிற்கு வந்ததும் சுடர் வந்தா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கிறாள். கனகவல்லி சுடர் வீட்டிற்கு வரவே இல்லை என்று சொல்ல எழில் அவளை இறக்கி விட்டதை நினைத்து பார்க்கிறான். கனகவல்லி அவளை தேடி கூட்டி வாப்பா என்று சொன்னதும் எழில் சுடரை இறக்கி விட்ட இடத்திற்கு வருகிறான்.ஆனால் அங்கு சுடர் இல்லை, இதனால் அதிர்ச்சி அடைகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.