கோலிவுட்டின் மாஸ்டர் பீஸ் டைரக்டரான ‘Thug Life’ மணிரத்னம் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் மணிரத்னம் அவர்களின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
Maniratnam
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான படங்களால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மணிரத்னம். நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே, பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்கள் ஏராளம். இவர் வெளியில் பார்க்க அமைதியானவராக இருந்தாலும் இவரது படங்கள் அதிரடியான பல்வேறு புரட்சிகரமான விஷயங்களை மக்களுக்கு உரக்கச் சொல்லும் வகையில் இருக்கும்.
Suhasini Maniratnam
இவரது படங்கள் தான் இன்றைய கால இயக்குனர்களுக்கு ஒரு விக்கிபீடியாவாக இருந்து வருகிறது. உதாரணத்துக்கு மணிரத்னத்தில் நாயகன் படத்தை பார்த்து சினிமாவுக்கு வந்து சாதித்த இயக்குனர் ஏராளம். கவுதம் மேனன், மிஷ்கின் போன்றோரும் அந்த லிஸ்ட்டில் உள்ளனர். இப்படி கோலிவுட்டில் லெஜண்டாக கருதப்படும் மணிரத்னம் 68 வயதிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.
Director Maniratnam
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உலகமே கொண்டாடியது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படமாக எடுக்க பல ஜாம்பவான்கள் முயன்றாலும் அது மணிரத்னத்தால் மட்டுமே சாத்தியமானது. இத்தகைய பிரம்மாண்ட படத்தின் இரண்டு பாகங்களையும் அவர் 150 நாட்களில் எடுத்து முடித்தது மற்றுமொரு ஆச்சர்யம்.
இதையும் படியுங்கள்... விறுவிறுப்பாக தயாராகும் உலக நாயகனின் Thug Life.. ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் இதோ - வெளியிட்டது யார் தெரியுமா?
Maniratnam wife suhasini
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.800 கோடி வசூலை வாரிக்குவித்திருந்தது. பொன்னியின் செல்வனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் என்கிற ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் கமலுடன் திரிஷா, ஜோ ஜோ ஜார்ஜ், துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Maniratnam Net Worth
இந்த நிலையில், இயக்குனர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி அவருக்கு சுமார் ரூ.150 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் ஒரு படத்துக்கு ரூ.25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதோடு, சில படங்களில் ஷேரில் குறிப்பிட்ட தொகையை வாங்கி இருக்கிறார்.
Maniratnam Salary
இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் டும் டும் டும், பைவ் ஸ்டார், வானம் கொட்டட்டும், செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன், தக் லைப் போன்ற படங்களை தயாரித்துள்ளது. தயாரிப்பாளராகவும் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் மணிரத்னம். இவருக்கு சொந்தமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் பல கோடி மதிப்பிலான வீடு உள்ளது. இதுதவிர சொகுசு கார்களும் மணிரத்னத்திடம் உள்ளதாம்
இதையும் படியுங்கள்... "நீங்க சொல்லுங்க.. பிளைட் மேல நின்னு டான்ஸ் ஆடுறேன்".. கியூட்டாக கேட்ட ஷாருக் - மணிரத்னம் சொன்ன பதில் என்ன?