திருவண்ணாமலை பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Pournami Girivalam
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மாசி மாதம் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் 23ம் தேதி பிப்ரவரி மாலை 4.22 மணி முதல் 24 பிப்ரவரி மாலை 6.18 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
tiruvannamalai
இந்நிலையில், கிரிவலத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Pournami Girivalam special buses
இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பவுர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக பக்தா்கள் வசதிக்காக, பிப்ரவரி 23-ம் தேதி (நாளை ) 682 சிறப்பு பேருந்துகளும், 24-ம் தேதி (நாளை மறுநாள்) 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தால் இயக்கப்பட உள்ளன.
special buses
பிப்ரவரி 23-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40, புதுச்சேரியிலிருந்து 30, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்படும்.
Government Bus
பிப்ரவரி 24-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 125, காஞ்சிபுரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிருந்து 20, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 என மொத்தம் 502 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும். மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க, குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.