Guru Peyarchi 2022: இன்னும் ஒரு வாரத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து பண மழை பொழியும்...
Guru Peyarchi 2022 Palangal: ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் அதாவது குரு பகவான் கும்பத்தில் பின்னோக்கி நகர்வார். குருவின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பம்பர் பலன்களைப் பெறப் போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
guru grah 001
வியாழன் அல்லது குரு பகவான் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், ஒரு நபர் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார்.
மீனத்தில் குரு பெயர்ச்சி:
ஜோதிடத்தின்படி, தேவகுரு வியாழன் 2022 ஏப்ரல் 13 அன்று தனது சொந்த ராசியான மீனத்தில் பிரவேசித்துள்ளார். 22 ஏப்ரல் 2023 வரை அவர் இங்கு இருப்பார். தற்போது, ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் அதாவது குரு பகவான் கும்பத்தில் பின்னோக்கி நகர்வார். குருவின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பம்பர் பலன்களைப் பெறப் போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
இந்த ஒரு வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்,வெற்றி நிச்சயம். இந்த நேரத்தில் பண வரவு இருக்கும். அதே நேரத்தில், சொத்து அல்லது நிலம் போன்றவற்றால் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் அனுகூலமான இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்ன பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குரு பகவான் உங்கள் பக்கம் இருப்பது அனைத்து வேலைகளிலும் வெற்றியைத் தரும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
shukra 001
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். குருவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது நேரம் சாதகமாக உள்ளது. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். நீண்ட நாள் எதிர்பார்த்த செயல் நிறைவேறும். திருமண யோகம் இருக்கும். வாழ்வில் புது ஒளி நிச்சயம்.
துலாம்:
இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக நல்ல வகையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. சொத்து வாங்கவும் செல்வம் பெருகவும் தற்போது யோகம் உள்ளது. எனினும், இந்த ராசிக்காரர்கள் லாட்டரி, பந்தயம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.