நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி.! சமந்தா வாழ்க்கையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடரின் கணிப்பு!
சமந்தா - நாகசைதன்யா பிரிந்து விடுவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை நயன்தாரா உருகி உருகி காதலித்து, திருமணம் செய்து கொண்டுள்ள விக்னேஷ் சிவனை வருங்காலத்தில் பிரிந்து விடுவார் என பிரபல ஜோதிடர் கணித்து கூறியுள்ள விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
Youtube தளத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கணித்துக் கூறி பிரபலமானவர் வேணு சுவாமி என்கிற ஜோதிடர். இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடிக்கு திருமணமான போதே, இவர்கள் இருவரும் சில வருடங்களில் பிரிந்து விடுவார்கள்.. அவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆசிய திரைப்பட விருதுகளில் 4 கேட்டகிரியில் நாமினேட் ஆகியுள்ள 'பாரடைஸ்'!
ஆரம்பத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடி மிகவும் சந்தோஷமான தம்பதிகளாக பார்க்கப்பட்டாலும் கூட, அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம் ஒரு கட்டத்தில் விவாகரத்தில் வந்து நின்றது. அப்போது இவர் ஏற்கனவே கணித்து கூறிய செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இதைத் தொடர்ந்து தற்போது ஜோதிடர் வேணு சுவாமி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளே... அவர்களின் பிரிவுக்கு காரணமாக அமையும் என்றும், நான் சொல்வது நடக்கவில்லை என்றால், ஜோதிடத்தை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை எடுத்துள்ள நயன்தாரா, தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், போன்ற டாப் தென்னிந்திய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் நடித்த அன்னபூரணி திரைப்படம், நயன்தாராவின் 75-ஆவது படமாக வெளியான நிலையில்... இதுவரை இவர் நடித்த எந்த படங்களுக்கும் எழாத சர்ச்சை இப்படத்திற்கு எழுந்தது மட்டும் இன்றி, குறிப்பிட்ட வசனத்தை சுட்டி காட்டி, இப்படம் ஓடிடி தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு ஆதரவாக பல பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமாக நடிகையாக இருப்பதோடு மட்டும் இன்றி கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். மேலும் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளை பொறுப்புடன் கவனித்து வரும் நயன்தாரா... அடுத்தடுத்து சில நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நாப்கின் நிறுவனம் மற்றும் 9ஸ்கின் என்கிற காஸ்மெட்டிக் நிறுவனம் போன்றவற்றை லான்ச் செய்தார்.
சமீபத்தில் சேலத்தில் நடந்த பெஃமி9 நிறுவனத்தின் சக்சஸ் விழாவில் கூட தன்னுடைய கணவர் தான் தன்னுடைய வெற்றிக்கு காரணம் என நயன்தாரா தெரிவித்திருந்தார். இப்படி ஈருடல் ஓருயிராக இருக்கும் நயன் - விக்கி காதல் விஷயத்தில், இவரது கணிப்பு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.