Nivisha Hospitalized: சன் டிவி சீரியல் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? திடீர் என மருத்துவமனையில் அனுமதி!
சன் டிவி சீரியல் நடிகை நிஷா, திடீரென உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
nivisha
சமீப காலமாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பலர், சீரியல் மற்றும் திரைப்படங்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்து, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரை உலகில் அறிமுகமானவர் தான் நிவிஷா.
nivisha
சென்னை எஸ் ஆர் எம் யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, 'அவளுக்கு என்ன அழகிய முகம்' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை பெற்று தராத நிலையில், அதிரடியாக சீரியலில் வாய்ப்பு தேட துவங்கினார்.
nivisha
அந்த வகையில் 'தெய்வமகள்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த போதிலும் இவரால் பிரபலமாக முடியவில்லை.
nivisha
ஆனால் கடந்த ஆண்டு சன் டிவியில் துவங்கப்பட்ட 'மலர்' சீரியல் பட்டி.. தொட்டி.. எங்கும் இவரை பிரபலமாக்கியது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென விலகிய நிவிஷா அதற்கான காரணத்தை கூறவில்லை. எனினும் வழக்கம்போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நிவிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வருவதோடு விரைவில் பூரண குணமடைவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், உங்களுக்கு என்ன ஆனது? என பதட்டத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.