MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சுத்த வேஸ்ட்... நிறைய பிராடு வேலைகளை பார்க்கிறார் - EX மாமியார் பற்றி சுசித்ரா சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்

சுத்த வேஸ்ட்... நிறைய பிராடு வேலைகளை பார்க்கிறார் - EX மாமியார் பற்றி சுசித்ரா சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்

தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் தாயார், பற்றி பாடகி சுசித்ரா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

2 Min read
Ganesh A
Published : Jul 31 2024, 11:31 AM IST| Updated : Jul 31 2024, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Singer Suchitra

Singer Suchitra

தமிழ் திரையுலகில் பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை என பன்முகத்திறமையாளராக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுமார் 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களது பிரிவுக்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் விவகாரம் தான். அந்த சமயத்தில் சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் பிரபலங்களில் அந்தரங்க புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகின.

24
Singer Suchitra

Singer Suchitra

சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே ஷாக் ஆனது. பின்னர் சினிமாவில் இருந்து ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார் சுசித்ரா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சுச்சி, தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய பல்வேறு விஷயங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். அதில் கார்த்திக் குமாரின் தாயார் பற்றியும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். 

இதையும் படியுங்கள்... பிளாஷ்பேக் : பெரும் ரகளை... அடிதடியோடு நடந்த கல்யாணம் - தேவையானியை ராஜகுமாரன் கரம்பிடித்தது எப்படி?

34
Suchitra Karthik Kumar

Suchitra Karthik Kumar

அதுபற்றி அவர் பேசியதாவது : “என்னுடைய முதல் கணவர் கார்த்திக் குமாரின் அம்மா சுத்த வேஸ்ட். அவர் உண்மையானவரே இல்லை. நிறைய பிராடு வேலைகளை பார்த்திருக்கிறார். அனாதை குழந்தைகளை விக்கிறது உள்பட நிறைய பிராடு வேலைகளை செய்கிறார். இதிலிருந்து அரசுக்கும் கட்டு போகிறது. அதனால அவரை கைது பண்ண முடியாது. ஓரினச்சேர்க்கையாளரான கார்த்திக் குமாரை நான் திருமணம் செய்துகொண்டதால், நான் ஏதோ அமுக்கப்பட்ட கோழினு அவங்க நினைச்சிட்டு இருந்தாங்க. 

44
suchitra interview

suchitra interview

வீட்டிற்குள் திருமணத்துக்கு எதிரா சண்டை போட்டுட்டு இருக்கது எனக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கு கல்யாணம் ஆகனும், அவளோட எதிர்காலம் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக தான் நான் இவ்ளோ நாளா நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடாம இருந்தேன். இன்னைக்கு அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு, எனக்கு வேற பிரச்சனை இல்லை. அதனால நான் இதை தைரியமா பேசுறேன்” என சுசித்ரா கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சுசித்ரா மீது கார்த்திக் குமார் கேஸ் போட்டார். அதில் அவர் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட சுசித்ராவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... புரமோஷனுக்கு வர 3 லட்சம்; ஸ்டேஜ்ல யார் கூட உக்காரனும்னு வேற கண்டிஷன் - அபர்ணதியால் டென்ஷன் ஆன சுரேஷ் காமாட்சி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved