Chinmayi: இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி! குடி போதையால் நடந்த விபரீதம்.!
பிரபல பாடகி சின்மயி தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியதாக பரபரப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Chinmayi First Song
தென்னிந்திய ரசிகர்களை, தன்னுடைய இனிமையான குரலால் வசீகரித்தவர் பிரபல பாடகி சின்மயி. 2002 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தின் முத்தமிட்டாள்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய, சிறு தெய்வம் தந்த பூவே பாடல், சின்மயியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.
Dubbing Artist:
இதை தொடர்ந்து, தற்போது சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில்... பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடகி என்பதை தாண்டி, பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி.
Chinmayi - Rahul Marriage:
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக, தன்னுடைய இதமான குரலால் ரசிகர்களை கவர்ந்துள்ள சின்மயி... கடந்த 2014-ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதையும் சின்மயி வழக்கமாக வைத்துள்ளார்.
Chinmayi Me-too Complaint:
அதே போல் சமூக அவலங்களுக்கு எதிராக, தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் குரல் கொடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர், கவிஞர் வைரமுத்து மீது... மீடூ புகார் கொடுத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய பெருமையும் சின்மயியை சேரும். இவரை தொடர்ந்து பல நடிகைகள் மட்டும் அல்லது பெண்கள் சிலரும் தங்களுக்கு பல்வேறு இடங்களிலும், அலுவலகங்களிலும் அரங்கேறும் பாலியல் புகார்களை வெளிப்படையாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Chinmayi met Accident:
இதை தொடர்ந்து தற்போது சின்மயி, விபத்தில் சிக்கிய தகவலை சமூக வலைத்தளத்தில் கூற, ரசிகர்களுடன் தொடர்ந்து அக்கறையோடு நலம் விசாரித்து வருகிறார்கள். சின்மயி தன்னுடைய இரட்டை குழந்தைகள், மற்றும் குடும்பத்தினருடன், காரில் சென்றபோது... குடிபோதையில் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுநர், சின்மயி வந்த காரில் இடித்துள்ளார். பின்னர் வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த பதிவை போட்டு, கொந்தளித்துள்ள சின்மயி அதிஷ்டவசமாக தனக்கும், தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறியுள்ளார்.