யார்கிட்டயும் சொல்லக்கூடாது சொல்லி டிரைவர் மாமா இப்படி எல்லாம் பண்ணாருமா!சிக்க வைக்க தாய் போட்ட மாஸ்டர் பிளான்
சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வேன் ஓட்டுநர் ரமேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
rape
சென்னை திருமங்கலத்தில் கேந்திரி வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படித்து வந்த 9 வயது சிறுமிக்கு யாரும் இல்லாத நேரத்தில் வேன் ஓட்டுநராக ரமேஷ் (40) பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ஒரு வாரமாக மகள் சோர்வாக காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தாய் மகளிடம் கேட்டுள்ளார். அப்போது தினமும் பள்ளிக்கு வேனில் அழைத்து செல்லும் வேன் டிரைவர் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத தாய் அதிர்ச்சியடைந்தார். வேன் ஓட்டுநரை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்பதால் தாய் மகள் படித்து வரும் பள்ளிக்கு சென்றுள்ளார்.
பின்னர், மகள் சென்று வரும் வேனின் பின்புறம் ஒளிந்து கொண்டு கண்காணித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மகள் உள்ளிட்ட சில சிறுமிகள் வேனில் ஏறி அமர்ந்த போது வேன் டிரைவர் பாலியல் தொந்தரவு செய்ததை சிறுமியின் தாய் வீடியோ எடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! ஒரு நைட்டுக்கு முன்னணி நடிகைனா ரூ.25,000! துணை நடிகைனா ரூ.10,000!
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வேன் ஓட்டுநர் ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ரமேஷ் அம்பத்தூர் 90வது உறுப்பினர் என்று கூறறுப்படுகிறது.