ராதிகா மற்றும் வரலட்சுமியோடு வந்து கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்த சரத்குமார் - வைரலாகும் போட்டோஸ்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டார்.
sarathkumar
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை நடிகர் சரத்குமார் தான் முன் நின்று நடத்தி வைத்துள்ளார்.
sarathkumar family
கும்பாபிஷேக விழாவுக்கு தனது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி உடன் வருகை தந்திருந்த சரத்குமாருக்கு கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்தும் பரிவட்டம் கட்டியும் வரவேற்பு அளித்தனர்.
sarathkumar daughter varalaxmi
பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் எடுத்த புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... காஞ்சி பட்டுடுத்தி குடும்பத்துடன் செம்ம கியூட்டாக போஸ் கொடுத்த வனிதாவின் தங்கச்சி ஸ்ரீதேவி - போட்டோஸ் இதோ
varalaxmi sarathkumar
காரைக்குடி அருகே உள்ள சரத்குமாரின் பூர்வீக கிராமத்தில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவை நடத்தும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
sarathkumar attend Kumbabhishekham
இந்த தருணத்தில் எனது மகள் ரயானையும் அவளது குழந்தைகளையும் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களால் வர முடியவில்லை. அவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
sarathkumar and radhika
மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி உடன் வந்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்த சரத்குமாருடனும் அவரது மனைவி மற்றும் மகளுடனும் அங்கு வந்திருந்த பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படியுங்கள்... நான் ரெடி தான் வரவா... த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டை அலப்பறையாக நடத்த ரெடியாகும் விஜய்! எங்கு? எப்போது?