Sandhya Raagam: கார்த்திக் கொடுத்த கிஃப்ட்.! சாருவிடம் கையும் களவுமாக சிக்கிய தனம் - சந்தியா ராகம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தனம் எல்லாரையும் கேன்டீன் அழைத்துச் சென்று ட்ரீட் வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கோச் கார்த்திக் தனது ஒரு போனை கிஃப்ட் ஆக கொடுத்து சப்ரைஸ் செய்கிறான். பிறகு தனம் வீட்டுக்கு வர வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க தனத்தை பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைத்துச் செல்கின்றனர். இதனால் தனம் ஹாலின் சோபாவில் பேக்கை வைத்துவிட்டு பூஜையில் பங்கேற்கிறாள்.
இந்த நேரம் பார்த்து ஒருவருடன் வீட்டுக்கு வரும் ரகுராம் அதே ஷோபாவில் உட்கார தனம் போன பார்த்துவிட்டால் என்ன ஆகிறது என்று பதற்றம் அடைகிறாள். மேலும் ரகுராம் கையெழுத்து போட வேணா கேட்க அப்பு தனத்தின் பேக்கில் பேனாவை தேட அதைப் பார்த்து தனத்தின் பதற்றம் இன்னும் அதிகமாகிறது. இதையெல்லாம் சாரு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
ஒரு வழியாக போன் யாரது கையிலே சிக்காமல் இருக்க பூஜை முடிந்தது தனம் பதற்றத்தோடு பேக்கை எடுத்துக் கொண்டு வேகவேகமாக ரூமுக்குள் செல்கிறாள். ரூமுக்குள் சென்றதும் முதலில் போனை தேட பேக்கில் போன் இல்லாமல் இருக்க இன்னும் அவளது பதற்றம் உச்சத்தை தொடுகிறது.
இந்த நேரத்தில் சாரு தனத்தின் ரூமுக்குள் வந்து என்ன தேடுற என்று கேட்க தனம் அமைதியாகவே இருக்க இதுதான தேடுற என்று போனை எடுத்துக்காட்ட தனம் பயந்து நடுங்குகிறாள். இது எப்படி என் கைக்கு வந்துச்சு என்று கேட்க அந்த பக்கம் நடந்து போகும் போது ஏதோ வைப்ரேட் ஆகுற மாதிரி இருந்தது. உன்னுடைய போன்ல தெரிஞ்சது வீட்டில யார் என்று கண்ணிலாவது பட்டா பிரச்சனையாகிடும் என்று நான் தானே எடுத்து மறைத்து வைத்தேன் என சொல்கிறாள்.
Yashika: யாஷிகாவுடன் CSK மேட்ச் பார்த்து ரணகளம் செய்த.. விஷ்ணு மற்றும் ரவீனா! வைரலாகும் போட்டோஸ்!
உனக்கு எப்படி போன் வந்தது என்று கேட்க கார்த்திக் தான் எனக்கு கிப்ட்டா கொடுத்தாரு. கேம் பத்தி கம்யூனிகேஷன் பண்றதுக்கு எதுவும் இல்லை என்பதால் இதை கொடுத்தார் என்று சொல்ல சாரு கார்த்திக் உனக்காக நிறைய பண்றாரு. அவர் உன்னோடு இருந்தால் உனக்கு ரொம்ப உதவியா இருக்கும் அவரை விட்டுடாத என்று சொல்லி போனை கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் தனம் நன்றி சொல்கிறாள்.
அதன் பிறகு பாத்ரூமுக்குள் செல்லும் கார்த்திக்கு போன் போட்டு நீண்ட நேரம் பேச மாயா தனத்தின் ரூமுக்கு வந்து அவளை தேடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.