- Home
- Gallery
- PM Modi in Kanyakumari : கன்னியாகுமரியில் அதிகாலையில் பிரதமர் மோடி தியானம்... வைரலாகும் போட்டோஸ்
PM Modi in Kanyakumari : கன்னியாகுமரியில் அதிகாலையில் பிரதமர் மோடி தியானம்... வைரலாகும் போட்டோஸ்
கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். நேற்று கன்னியாகுமரி வந்த மோடி முதலில் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மோடியின் வருகையால் கன்னியாக்குமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மோடி வருகைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி அவர் கன்னியாகுமரியில் தியான நிகழ்ச்சி நடத்தக்கூடாது எனவும் எதிர்ப்பு குரல்கள் வந்தன.
மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோ பேக் மோடி என்கிற வாசகம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
இதையும் படியுங்கள்... PM Modi : பிரதமரின் வருகை.. தமிழ் மக்கள் மீது உள்ள பாசத்தை பிரதிபலிக்கிறது - நடிகர் சரத்குமார் உருக்கம்!
கடும் எதிர்ப்புகளை மீறி நேற்று கன்னியாகுமரி வந்த மோடியை வரவேற்க பாஜகவினர் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளமான விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று சூர்ய உதயத்தை கண்டுகளித்தார் மோடி.
அதுமட்டுமின்றி சூர்ய உதயத்தின் போது சூர்ய நமஸ்காரம் செய்து வழிபட்ட அவர், பின்னர் அங்கு அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!