OP Ravindranath Divorce Petition! மனைவியை டைவர்ஸ் செய்கிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! நீதிமன்றம் படியேறினார்!
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத். இவருக்கு ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கருத்து வேறுபாடு என்ற காரணத்தைக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இருவரும் இணைந்து விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திரநாத் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு அவரது மனைவி தரப்பில் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.