விஜய்யே காசு கொடுத்து சம்பளத்தை 100 கோடியா ஏத்திக்கிட்டாரு! பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகர்
நடிகர் விஜய் பணத்தை கொடுத்து தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திக்கொண்டதாக பிரபல நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Vijay
தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் விஜய். இதுவரை ஒரு படத்துக்கு 150 கோடி சம்பளமாக வாங்கி வந்த விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படத்துக்காக ரூ.200 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், குணச்சித்திர நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் விஜய்யின் சம்பள உயர்வுக்கு பின்னணியில் உள்ள ஷாக்கிங் சீக்ரெட்டை வெளியிட்டு உள்ளார்.
Meesai Rajendran
இதுகுறித்து அவர் கூறியதாவது : "விஜய் முதன்முதலில் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியது சிம்புதேவன் இயக்கிய புலி படத்துக்கு தான். செல்வக்குமார் என்பவர் தான் அந்த படத்தை தயாரித்து இருந்தார். அந்த செல்வக்குமார் வேறுயாருமில்லை நடிகர் விஜய்யிடம் மேனேஜராக பணியாற்றியவர் தான். அவருக்கு எப்படி அவ்வளவு பெரிய படத்தை தயாரிக்க காசு வந்தது.
இதையும் படியுங்கள்...“அட்லி என்னை நம்ப வைச்சு ஏமாத்திட்டாரு..” நடிகை பிரியாமணி சொன்ன தகவல்..
Thalapathy vijay
அந்த பணம் அனைத்துமே விஜய் உடையது தான். அவர் பணத்தையே கொடுத்து படத்தை எடுத்து அதற்கு ரூ.70 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்கிறார். அதன்மூலம் அவரின் மார்க்கெட்டும் ஏற ஆரம்பிக்கிறது. இதே பார்முலாவை தான் மாஸ்டர் படத்திலும் பயன்படுத்தினார் விஜய். மாஸ்டர் படத்தை தயாரித்தது நடிகர் விஜய்யின் தாய் மாமா சேவியர் பிரிட்டோ என்பது அனைவருக்கும் தெரியும்.
vijay salary
அப்படத்தை எடுக்க அவர் செலவழித்தது எல்லாம் விஜய்யோட பணம் தான். இப்படி ஒவ்வொரு படத்துக்கும் விஜய், தான் சம்பாதித்த பணத்தை கொடுத்தே தன் சம்பளத்தை உயர்த்திக்கொண்டார். அதனால் தான் அவருடைய சம்பளம் தற்போது ரூ.100 கோடியை தாண்டிவிட்டது” என நடிகர் மீசை ராஜேந்திரன் கூறி இருக்கிறார். விஜய்யின் சம்பளம் குறித்து அவர் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... 9 மணி காட்சிக்கும் வருகிறது தடை? ஜெயிலருக்கு ஒரு நியாயம்.. லியோவுக்கு ஒரு நியாயமா? சோசியல் மீடியாவில் சலசலப்பு