அனைவர் மும்பும் வெள்ளை புடவையால் அவமானப்பட்ட அபிராமி! தீபாவுக்கு கொடுத்த தண்டை! கார்த்திக் செய்யப்போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இருவரும் கல்யாண வீட்டிற்கு வர அங்கிருந்தவர்கள் பகையை எதுவும் மனதில் வச்சிக்காமல் வந்திருக்கீங்க என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்ல இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்க அதை வாங்கி பிரித்த கல்யாண பெண் வெள்ளை புடவையும் விபூதியும் இருப்பதை பார்த்து பயத்தில் கீழே போட்டு விட அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
நீ பழைய பகையை மனசில் வச்சி தான் இப்படி கீழ்த்தரமான வேலை பண்ணிருக்க என்று அபிராமியை திட்டி வெளியே துரத்த தீபா கண் கலங்கி நிற்கிறாள், அபிராமி நீ கோவிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே என்று தீபாவை திட்டுகிறாள், இனிமே நீ நான் குடிக்க தண்ணி கூட கொடுக்க கூடாது என்று ஆவேசப்படுகிறாள். இங்க நடந்த விஷயம் எதுவும் கார்த்திக்கு தெரியவும் கூடாது என கண்டிஷன் போடுகிறாள்.
அனால், இங்கிருந்து இதை பார்த்த கார்த்தியின் பெரியம்மா ஒருவர் கார்த்திக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்க மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்ய கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு என்று சொல்ல நான் பார்த்துக்கறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான்.
Karthigai deepam serial
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்
Metti Oli 2: வந்துடுச்சு 'மெட்டி ஒலி' 2 அப்டேட்! இயக்குனர் திருமுருகன் முடிவால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!