உனக்கு ஜாதி விட்டு ஜாதி பொண்ணு கேக்குதா! பெற்ற மகளையும், காதலனையும் துடிதுடிக்க ஆணவக் கொலை கொலை செய்த தந்தை.!
காதலை கைவிட மறுத்ததால் மகளையும், காதலனையும் பெண்ணின் தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Uttar Pradesh
உத்தரபிரப்தேச மாநிலம் பரோலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் நீத்து (20). இவர் அதே பகுதியை சேர்ந்த சச்சின் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலர்கள் இருவரையும் பிரிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் அனைத்தும் தோல்விலேயே முடிந்தது.
honour killing
இதனையடுத்து நீத்துவை பெற்றோர் வீட்டிலேயே அடைத்து வைத்தனர். இந்நிலையில் நீத்துவை பார்க்க சச்சின் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரையும் ஒன்றாக பார்த்த தந்தை ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் நீத்துவின் தந்தை மகேஷ், மண்வெட்டியை எடுத்து வந்து இருவரையும் கொடூரமாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- ஹாஸ்டலில் வைத்தே ஓயாமல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அமமுக முக்கிய பிரமுகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.!
police Arrest
இதையடுத்து ரத்தம் வழியும் மண்வெட்டியுடன் காவல் நிலையத்திற்கு சென்று மகேஷ் சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் இருவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேறு சாதி இளைஞரை காதலித்த மகளையும், காதலனையும் ஆணவக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- பாரினில் இருந்தே பக்கா ஸ்கெட்ச்.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொலை.. நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி?